You are here
Home > செய்திகள் (Page 8)

சிவபெருமான் சிறைக்குள்ளே!

உலகமே கரோனாவால் நடுங்கி ஒடுங்கிச் செத்துக் கொண்டிருக்கிறது. உலகின் எல்லா மூலையிலும் நடுக்கம்! மக்களின் நடுக்கத்தால் பூமியே சற்று வேகமாகச் சுற்றுகிறது, நமக்கு கடவுளின் மீதே கோபம் வருகிறது. சிவனை கருணாகரன் என்பர்; ஆனால் சிவன் இப்ப கரோனாகரன் ஆகிவிட்டான். ஆதிக்க நாடுகள் கூட பாதிக்கப்பட்டு மருந்துக்காகத் திருவோடு ஏந்தி தெருவோடு திரிகின்றன. இதுதான் மருந்து என்று கூட கண்ணில் காட்டாமல் இதென்ன நோய் என்று காறி துப்பலாமா என்றால்

உவமையில் வந்த உவகை

ஒரு புலவனின் உயர்வை அவன் கையாளுகிற உவமை புலப்படுத்தி விடும். அதுவே அவனைக் காட்டும் அளவுகோல். "பையன் சரியா மார்க் வாங்கலை சார்! அதனால் நேற்றைக்கு அவனுக்குத் தனி ஆவர்த்தனம் தான்! என்றால் அவர் மிருதங்கக்காரர்; அந்தப் புலவர் பேர் மாமூலனார் என்று சொன்னீங்களே, அவர் காவல் துறையைச் சேர்ந்தவரா என்று கேட்டால் கேட்டவர் யார் என்று தானே விளங்குகிறது. ஆகா உவமையைக் கொண்டே அவர் யார் என்று தெரிந்துவிடும். ஆனால்

பதைக்கையில் ஒரு பைந்தமிழ்ப் பரிந்துரை

இது நடந்தது ஒரு கப்பல் பயணத்தில். மொரீஷியஸ் நாட்டிற்கு விருந்தினராகச் சென்ற போது அன்பர்கள் ஒரு பெரிய உல்லாசக் கப்பலுக்கு அழைத்துச் சென்றனர். திடீரெனப் பெருமழை பெய்ததால் ஒரு நாள் இரவு கப்பலிலேயே தங்க வேண்டி இருந்தது. அன்பர்களின் அபரிமிதமான உபசரிப்பில் நன்றாகத் தூங்கிப் போனேன். திடீரெனப் பார்த்தால் புராணப் படங்களில் வருபவர் போல ராஜகம்பீரமாக ஒருவர் என் அருகே வந்தமர்ந்தார். சரியாகக் கணித்து விட்டீர்கள்! கனவு தான்! நான் படுக்கையிலிருந்து

பெரு நடிகரும் பைந்தமிழும்

பெரியபுராண உரை நூலில் மூழ்கி இருந்தேன். பொதுவாக நான் படிக்கும் போது தூங்குவதில்லை. ஆனால் தூங்கும் போதும் ஏதாவது ஒரு நூலை, அதில் உள்ள பாடலை மனம் தொடர்ந்து அசை போட்டுக் கொண்டே இருக்கும். அப்படி மனனமான பாடல்கள் பல. என்னவோ தெரியவில்லை அன்று பெரிய புராணத்தை படித்துக் கொண்டே தூங்கி விட்டேன். திடீரென்று பார்த்தால் கனவில் சேக்கிழார் வந்து நிற்கிறார்; பணிந்தேன்; "வா! போகலாம்" என்று அழைக்க அவருடன்

செப்பச் சிறந்த செந்தமிழ் நயம்

தமிழர் கட்டடக் காலை சிறப்பு உலகில் புகழ் பெற்றது. இதனை நெடுநல் வாடை, மதுரைக் காஞ்சி, புறநானூறு போன்ற சங்க நூல்களில் விரிவாகக் காணலாம். இப்போது ஒரு வர்ண நிறுவனம் கட்டடத்தையே 'லேமினேட்' பண்ணிப் பார்த்திருக்கிறீர்களா என்று சொல்வதைக் கேட்டுச் சிரிப்புதான் வருகிறது. வர்ணப் பூச்சால் அல்ல உலோகத் தகடுகளாலேயே "லேமினேட்' பண்ணவன் தமிழன். புலிகடிமால் என்ற மன்னன் செம்பு புரி புரிசை உடையவனாம். புரிசை என்றால் கோட்டை. வீட்டை

செவிமடுப்போம் செந்தமிழ் நயம்!

சிறியேன் சிறுவயதிலிருந்தே ஒரு பெருமை குறித்து மார்தட்டிக் கொள்வது உண்டு. அது நான் பிறந்த வேலூர் பற்றியது. உலகில் எந்நாட்டிலும் மண்ணில் ஏதேதோ விளைய, இங்கு மட்டும் மண்ணில் தமிழ் முருகனின் தனிவேல் முளைக்கிறதாம். சிறுபாணாற்றுப்படையில், திறல்வேல் நுதியிற் பூத்த கேணி விறல்வேல் வென்றி வேலூர்.' - (சிறுபாணாற்றுப்படை வரி 172 - 173) இத்தகைய சங்கப்பாட்டில் இடம் பெற்ற பெருமையுடைய வேலூரில் ஓர் ஆறு ஓடுகிறது; பெயர் பாலாறு. இன்று இது ஓடிய அடையாளத்துடன்

செம்மலீர் ! கேளீர்! செந்தமிழ் நயத்தை! பெரியபுராணம் – திருக்குறிப்புத் தொண்டர்

     இயற்கை எவ்வளவு நாள் பொறுமையோடு இருக்கும்? குப்பையைக் கொட்டிக் கொண்டே இருந்தால் குவலயம் பொறுக்குமா? போதும் நிறுத்து என்று மனித இனத்தை நெட்டித் தள்ளி முட்டி தட்டி வீட்டில் முடக்கக் கோரேனா என்று இயற்கை அனுப்பி வைத்தது தான் கொரோனா!      இன்று இயற்கை நிம்மதியாக சுவாசிக்கிறது. கங்கை, யமுனை போன்ற பெருநதிகள் நிர்மலமாக ஓடுகின்றன. காற்றில் மாசு குறைந்து மூச்சுத் திணறல் நின்றிருக்கிறது இதெல்லாம் செய்திகள்!  

அடியவர் குழாத்திற்கு மு.பெ.சத்தியவேல் முருகனின் அருந்தமிழ்ப் பகிர்வு பெரியபுராணம் – முருகநாயனார்

     இனிது இனிது ஏகாந்தம் இனிது என்று ஒளவையார் கூறியபோது யாரும் கேட்கவில்லை. இப்போது ஒரு கிருமி சொன்னால் உலகமே கேட்டு தனிமையில் முடங்கிக் கிடக்கிறது. ஒளவையார் சொன்ன தனிமை இனிமை உடையது. கிருமி துரத்தும் தனிமை இனிமையானதல்ல. விடிவிற்கு ஏங்குகிறோம். தனிமைக்கு இனிமையை அளிக்கக் கூடியது தமிழ் தான்! 'இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும்' என்பர். எனவே இந்தத் தனிமையை இனிமையாக்கப் பெரியபுராணச் சேக்கிழாருடன் பொழுது போக்கிக்

திருச்சாட்டியக்குடி

வணக்கம்  கொரோனா நோயின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் உலக மக்களின் நலனுக்காக எந்த திருமுறைப் பதிகத்தை ஓதுவது என்று எண்ணி கையறு நிலையில் நின்ற நமக்கு கிடைத்த வரமாக நமது குருநாதர் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் அளித்த அறிவிப்பு.  ஓதி நலம் பெறுக.

சாட்டியக்குடி கோயில்

வணக்கம் ஊர் பெயர் - "சாட்டியக்குடி"; கோயில் பெயர் - "ஏழ் இருக்கை". இத்தலம் ஓர் வைப்புத்தலம். இத்தலத்தில் வந்து வணங்கிய தீக்கடவுளுக்கு அத்தீக்கடவுளை இயக்கும் "தீயினில் மூன்றாய்த் திகழ்ந்திடும்" சிவனே அவ்வடிவிலேயே அருள் புரிந்தான் என்பதால் இத்தலத்து சிவத்திருக்கோலம் மேலே கிளைத்த இருமுகங்கள், முத்தீயைக் குறிக்கும். மூன்று கால்கள், தீ எழுந்து வீசுவதால் ஏழு கைகள் என்ற வடிவில் அமைந்திருக்கும். அதனால் இக்கோயிலுக்கு "ஏழ் இருக்கை " என்று பெயர் திருச்சாட்டியக்குடி எங்குள்ளது?? இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருக்கீழ்வேளூர்

Top