You are here
Home > நிகழ்வுகள்

13ம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் மற்றும் படிவிழா

https://www.youtube.com/watch?v=2dyNC5S8RCo&feature=youtu.be சீலம் நிறைந்த செம்மல்களே! வள்ளிமணாளன் திருவருளாலும், வாரியார் சுவாமிகள் குருவருளாலும், திருப்புகழ் சிவம் வேலூர்.மு.பெருமாள் அவர்கள் நல்ஆசியாலும் தெய்வத்தமிழ் அறக்கட்டளை நடத்தும் "தமிழர் திருநாள் ஆசிபெறும் 13ம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் மற்றும் படிவிழா வருகின்ற 06-01-2024 காரி(சனி)க் கிழமை மற்றும் 07-01-2024 ஞாயிற்றுக் கிழமை அன்று நமது ஞானதேசிகர் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் வழிநடத்த கீழ்கண்ட நிகழ்ச்சி நிரலின்படி நடைபெற உள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாண்டு பொங்கல் தொடங்கி அன்பர்கள்

33 ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா

ஆன்மநேய அன்பர்களே! ஆண்டுதோறும் நமது குருபிரான் ஞானதேசிகர் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் வழிநடத்த திருமந்திர முற்றோதலை நடத்தி வரும் எங்கள் அமைப்புகள் அதன் வரிசையில் 33ம் ஆண்டு முற்றோதல் விழாவை திருவருள் நலத்தால் நடாத்த இருக்கின்றன. இவ்வாண்டு திருமந்திர முற்றோதல் ஐந்தாம் சுற்றாகவும் அதிலும் மூன்றாம் (3) தந்திரம் முற்றோதல் செய்யப்பட இருக்கிறது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம். நிகழ்ச்சி நிரல்: அழைப்பிதழ் இணைத்துள்ளேன். Download PDF விழாவின் முக்கிய நிகழ்வுகள்: 1. 3–ஆம் தந்திர முற்றோதல் 2. திருமந்திரம்

12ம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் மற்றும் படிவிழா

சீலம் நிறைந்த செம்மல்களே! வள்ளிமணாளன் திருவருளாலும், வாரியார் சுவாமிகள் குருவருளாலும், திருப்புகழ் சிவம் வேலூர்.மு.பெருமாள் அவர்கள் நல்ஆசியாலும் தெய்வத்தமிழ் அறக்கட்டளை நடத்தும் "தமிழர் திருநாள் ஆசிபெறும் 12ம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் மற்றும் படிவிழா வருகின்ற 06-01-2023 வெள்ளிக் கிழமை மற்றும் 07-01-2023 காரி(சனி)க் கிழமை அன்று நமது ஞானதேசிகர் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் வழிநடத்த கீழ்கண்ட நிகழ்ச்சி நிரலின்படி நடைபெற உள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாண்டு பொங்கல் தொடங்கி அன்பர்கள்

32 ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா

ஆன்மநேய அன்பர்களே! ஆண்டுதோறும் திருமந்திர முற்றோதலை நடத்தி வரும் எங்கள் அமைப்புகள் அதன் வரிசையில் 32ம் ஆண்டு முற்றோதல் விழாவை எடுக்கின்றன. இவ்வாண்டு திருமந்திர முற்றோதல் ஐந்தாம் சுற்றில் இரண்டாம்(2) தந்திரம் முற்றோதல் செய்யப்பட இருக்கிறது. கரோனா காரணமாக அரசின் அறிவுறுத்தலின்படி இவ்வாண்டு விழா நடைபெறுகிறது. அன்பர்கள் அதற்கேற்ப ஒத்துழைக்க அன்புடன் வேண்டுகிறோம். நாளும் நேரமும்: 01-01-2023 ; ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணி முதல் இரவு 9.00 மணி வரை இடம்: சேவா நகர் சமூக நலக்கூடம், சேவா

வள்ளலாரும் வழக்குகளும் – சன்மார்க்க சிறப்பு சொற்பொழிவு

சன்மார்க்க சிறப்பு சொற்பொழிவு : திரு. ச. திருச்சுடர் நம்பி "வள்ளலாரும் வழக்குகளும்" நாள்: 25-12-2022 -  நேரம்: 3.00 - 4.00  இடம்: P M P தனலட்சுமி மஹால், சத்துவாச்சாரி, வேலூர் மாவட்டம்    

100வது திருவாசக முற்றோதல்

100வது திருவாசக முற்றோதல் வணக்கம். நமது ஞானதேசிகர் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள், அசோக் நகர் ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயத்தில் 11 டிசம்பர் 2022 அன்று நடைபெற உள்ள 100வது திருவாசக முற்றோதல் நிகழ்வில் நூறு நூறு ஆயிரம் இயல்பினராகி என்ற தலைப்பில் பேச உள்ளார். வாய்ப்புள்ளோர் கலந்து கொள்ளவும். இடம்: ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயம், டாக்டர்.இராஜேந்திர பிரசாத் தெரு, சத்தியமூர்த்தி பிளாக், அசோக் நகர், சென்னை 600083. நேரம்: மாலை 4.00 மணி

அருட்பா நெறி அத்வைதமா?

வணக்கம். நமது ஞானதேசிகர் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள், இரத்தினகிரியில் நடைபெற உள்ள தமிழ்நாடு அரசின் வள்ளலார் 200 நிகழ்வில் 27 நவம்பர் 2022 அன்று அருட்பா நெறி அத்வைதமா? என்ற தலைப்பில் பேச உள்ளார். வாய்ப்புள்ளோர் கலந்து கொள்ளவும். இடம்: அ/மி பாலமுருகன் திருக்கோயில் மலையடிவாரம், இரத்தினகிரி. நேரம்: காலை 10.00 மணி அளவில்  

வள்ளலார் நெறி ஒரு பார்வை

வணக்கம். நமது ஞானதேசிகர் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள், சென்னை பல்கலைக் கழகம் தமிழ் இலக்கியத்துறையின் கீழ் “பேராசிரியர் அரங்க.இராமலிங்கம் அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்வில் 25 நவம்பர் 2022 அன்று “வள்ளலார் நெறி ஒரு பார்வை” என்ற தலைப்பில் பேச உள்ளார். வாய்ப்புள்ளோர் கலந்து கொள்ளவும். இடம்: தமிழ் இலக்கியத்துறை கருத்தரங்க அறை, சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை. நேரம்: முற்பகல் 11.00 மணி  

14ம் ஆண்டு கந்தன் கவினாறு (கந்த சஷ்டி) விழா

முருக நேய அன்பர்களே! வணக்கம்!! ஆதம்பாக்கம் அருந்தமிழ் வழிபாட்டு மன்றம் இறை திருவருளாலும் குருவருளாலும் நமது ஞானதேசிகர் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் வழிகாட்டுத்தலின்படி நடாத்தும் 14ம் ஆண்டு கந்தன் கவினாறு (கந்த சஷ்டி) விழா அழைப்பிதழை இணைத்துள்ளேன். முருகன் திருவருளை நிணைந்து இணைந்து அருள் நலம் பெற பணிவோடு அழைகின்றோம்!!    

Top