
முதல் திருமுறை
பதிகம் எண் : 79 பதிகம் : திருக்கழுமலம் பாடல் எண் : 10
ஆம்பலதவமுயன் றறவுரைசொல்லு மறிவிலாச்சமணருந் தேரருங்கணிசேர்
நோம்பலதவமறி யாதவர்நொடிந்த மூதுரைகொள்கிலா முதல்வர்தம்மேனிச்
சாம்பலும்பூசிவெண் டலைகலனாகத் தையலாரிடுபலி வையகத்தேற்றுக்
காம்பனதோளியொ டினிதுறைகோயில் கழுமலநினையநம் வினைகரிசறுமே.