You are here
Home > செய்திகள் (Page 11)

முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனாரின் பவழ விழா

முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனாரின் பவழ விழா நாள்: 21-09-2019 காரிக்கிழமை; மதியம் 2:00 மணி முதல் இடம்: காமராஜர் அரங்கம், தேனாம்பேட்டை, சென்னை https://youtu.be/w7WMvqrr60o Click here for Photo album  

இன்பத்தமிழ் வேதம் நூல் வெளியீட்டு விழா

அன்பர்களே!    மீண்டும் ஓர் நற்செய்தி. தமிழ்வேத வியாசராகிய நமது ஞானகுருநாதர் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் தொகுத்தளிக்கும் மூன்றாம் தமிழ் வேதமாகிய இன்பத் தமிழ் வேதம் தமிழ் கூறும் நல்லுலகம் போற்றும் வகையில் தமிழன்னைக்கும் தமிழ் மக்களுக்கும் காணிக்கை ஆக்கி வெளியீடு செய்யப்பட உள்ளது. இந்நூல் வெளியீட்டு விழா ஆகஸ்ட் 16, 2019 தேதி  வெள்ளிக்கிழமை அன்று மாலை 5 மணி அளவில்  சென்னை, தி.நகர், பாண்டிபஜாரில் உள்ள பிட்டி தியாகராயர் ஹாலில் நடைபெற திருவருள் கூட்டியுள்ளது.    வரலாற்று

மணிவாசகர் போற்றி 16

செந்தமிழ் வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் ஓம் வாதவூர் வந்துதி வள்ளலே போற்றி ஓம் ஏதமில் கல்வியின் ஏற்றமே போற்றி ஓம் வழுதியின் முதலமைச் சானாய் போற்றி ஓம் பழுதிலா பரிதேர் பணியினாய் போற்றி ஓம் அருந்தவன் குருந்தடி ஆண்டனன் போற்றி ஓம் திருந்துநல் தீக்கையைத் தந்தனன் போற்றி ஓம் பெருந்துறைக் கோயிலைப் புரிந்தனை போற்றி ஓம் அரும்பொருள் தீர்ந்ததில் ஆர்கவி போற்றி ஓம் வழுதி வறுத்திட உளைந்தனை போற்றி ஓம் பொழுதில் பரமன்வந் தாண்டனன் போற்றி ஓம் பிட்டுக்கு மண்சுமந் தருளினன் போற்றி ஓம்

யோகாவை கண்டறிந்து உலகிற்கு அறிவித்தவர்கள் தமிழர்கள்

யோகம் என்ற சொல் ஓகம் என்ற தமிழ் சொல்லிலிருந்து திரிந்த வடசொல். யோகா நெறியைக் கண்டறிந்து உலகிற்கு அறிவித்த முதல் மனித இனம் தமிழினம் தான். சிந்துவெளிப் பகுதியில் வாழ்ந்த தமிழ்மக்கள் இடையே யோகம் இருந்துள்ளது. இன்று யோகத்திற்குக் கூறும் எட்டுறுப்புகளையும் தொல்காப்பியர் கூறி இருக்கிறார் தமிழ்ச் சொல் வடமொழி தீதகற்றல் இயமம் நன்றாற்றல் நியமம் இருக்கை ஆசனம் உயிர்வளிநிலை பிராணாயாமம் தொகைநிலை பிரத்தியாகாரம் பொறைநிலை தாரணை உள்குதல் தியானம் நொசிப்பு சமாதி நன்றி: "திருமந்திர மூன்றாம் தந்திர சாரம்" - முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் www.dheivamurasu.org     www.archakar.com     www.vedham.in https://www.youtube.com/dheivamurasu

மதிப்புரை – சைவ வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு

சைவ வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு ஆசிரியர் : செந்தமிழ் வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் மதிப்புரை : அவிரொளி சிவம் ச. மு. தியாகராசன்     இதுகாறும் தமிழ்ச் சமூகத்திற்குக் குறிப்பாக சைவ சமய உலகத்திற்குப் பயன்படும் வகையில் பல (பத்ததிகளை) செய்முறை கருவி நூல்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தி வரும் நம் ஆசிரியர் நாம் வழிபடும் தெய்வங்களுக்கும் அருளாளர் அடியார்களுக்கும் உரிய போற்றிகளை 16 இல் தொடங்கி நூற்றெட்டு, முந்நூற்றெட்டு, ஐநூறு

8ஆம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் படிவிழா

   Click here to Download VallimalaiPadiVizha.pdf  அருள்மிகு தேவி வள்ளியம்மை தவப்பீடம் வள்ளிமலை - 632520, வேலூர் மாவட்டம்    நாள்                 12.01.2019 முதல் 13.01.2019 வரை , காரி (சனி)க்கிழமை , ஞாயிறு

சைவ-வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு

மதிப்புரை சைவ-வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு இயற்றித் தொகுத்த ஆசிரியர்: செந்தமிழ் வேள்விச்சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் பக்கங்கள்: 500 விலை: ரூ 350 தொடர்புக்கு: +919445103775   போற்றியைச் சொன்னால் அது என்ன பலம் தரும் என்று அப்பர் சொல்கிறார். அது மந்திரச் சொல் ஆயிற்றே! ஏதாவது பலன் தர வேண்டுமே! என்ன பலம் தரும் என்று அப்பர் பாடுவதைப் பாருங்கள்.   முத்தூரும் புனல் மொய்யரி சிற்கரைப் புத்தூரன்அடி போற்றி என்பாரெல்லாம் பொய்த்தூரும்புலன் ஐந்தொடும் புல்கிய மைத்தூரும் வினை மாற்றவும் வல்லரே.   போற்றி மந்திரச் சொல்லாய்

Top