You are here
Home > செய்திகள் > இன்பத்தமிழ் வேதம் நூல் வெளியீட்டு விழா

இன்பத்தமிழ் வேதம் நூல் வெளியீட்டு விழா

அன்பர்களே! 
 
மீண்டும் ஓர் நற்செய்தி. தமிழ்வேத வியாசராகிய நமது ஞானகுருநாதர் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் தொகுத்தளிக்கும் மூன்றாம் தமிழ் வேதமாகிய இன்பத் தமிழ் வேதம் தமிழ் கூறும் நல்லுலகம் போற்றும் வகையில் தமிழன்னைக்கும் தமிழ் மக்களுக்கும் காணிக்கை ஆக்கி வெளியீடு செய்யப்பட உள்ளது. இந்நூல் வெளியீட்டு விழா ஆகஸ்ட் 16, 2019 தேதி  வெள்ளிக்கிழமை அன்று மாலை 5 மணி அளவில்  சென்னை, தி.நகர், பாண்டிபஜாரில் உள்ள பிட்டி தியாகராயர் ஹாலில் நடைபெற திருவருள் கூட்டியுள்ளது. 
 
வரலாற்று சிறப்பு மிக்க இவ்விழாவிற்கு  தங்கள் சுற்றத்தோடு வந்து கலந்து கொண்டு தமிழின் மாண்பினை போற்றி இன்புறுவோமாக என்று அன்புடன் அழைக்கின்றோம்.
 
அனைவரும் வருக!!!
🙏🙏🙏
 
 
 
 

 

இன்பத்தமிழ் வேதம் நூல் வெளியீட்டு விழா (16/08/2019) / Google Photos

Top