You are here
Home > Author: Editor (Page 2)

தமிழ்ச்சமய மாநாடு 2023

  பத்துமலையில் நான்காவது தமிழ்ச் சமய மாநாடு ; தமிழர்கள் பண்பாட்டு உடையில் திரண்டு வாருங்கள் https://nambikkai.com.my/detail/18012 பத்துமலை : பத்துமலையில் நடைபெறவிருக்கும் நான்காவது தமிழ்ச் சமய மாநாட்டுக்குத் தமிழர்கள் பாரம்பரிய உடையில் திரண்டு வருமாறு மாநாட்டு ஒருங்கினைப்பாளர் தலைவர் வீ. பாலமுருகன் கூறினார். மலேசியத் தமிழ்ச் சமயப் பேரவையின் ஏற்பாட்டிலான இம்மாநாடு வரும் செப்டம்பர் 16-ஆம் தேதி சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை பத்துமலை திருமுருகன் திருக்கோவில் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. தமிழால்,

தமிழ் அர்ச்சகர் பயிற்சி வகுப்பு – மாணவர் சேர்க்கை அறிவிப்பு – Tamizh Archakar Training

விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன விண்ணப்பப் படிவம் – இங்கே பதிவிறக்கம் செய்க. Click here to Download Application Form   தமிழ் அர்ச்சகர் பயிற்சி வகுப்பு - 12ஆம் குழாம் மாணவர் சேர்க்கை வணக்கம்! பாடல் பெற்ற தமிழகக் கோயில்கள் அனைத்தும் தமிழிலேயே பாடல் பெற்றவை. ஒன்று கூட வடமொழியில் பாடல் பெறவில்லை. ஆனால் கோயிலுக்குள்ளே வேற்று மொழி வழிபாடு! இந்த நிலை மாற தமிழ் வழிபாட்டுப் பயிற்சி பெற வேண்டுமா? நமது கோயில்களில் நற்றமிழ் வழிபாடு

தமிழ் நாட்காட்டி 2023

  தெய்வமுரசு நற்றமிழ் நாட்காட்டியின் சிறப்புகள் எண்ணிலும் எழுத்திலும் எல்லாக் கோணத்திலும் தூய தமிழ்ப்பெயர்கள் அமைந்த நாட்காட்டி. தமிழில் எண்களின் வரிவடிவம் உண்டா என்று அறியாத தமிழிளந் தலைமுறைக்கு அவற்றை அறிமுகப்படுத்தல். 60 தமிழ் ஆண்டுகளின் பெயர்களையும் வடமொழி பெயர்களுக்கு பதிலாக பொருள் பொதிந்த  தமிழ் இணைப் பெயர்கள் – வெம்முகம் (துன்முகி), பொற்றடை (ஏவிளம்பி), அட்டி (விளம்பி) மதியால் பெயர் பெற்ற மாதங்களின் பெயரைத் தூய தமிழால் வழங்குதல். அமாவாசை –

12ம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் மற்றும் படிவிழா

சீலம் நிறைந்த செம்மல்களே! வள்ளிமணாளன் திருவருளாலும், வாரியார் சுவாமிகள் குருவருளாலும், திருப்புகழ் சிவம் வேலூர்.மு.பெருமாள் அவர்கள் நல்ஆசியாலும் தெய்வத்தமிழ் அறக்கட்டளை நடத்தும் "தமிழர் திருநாள் ஆசிபெறும் 12ம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் மற்றும் படிவிழா வருகின்ற 06-01-2023 வெள்ளிக் கிழமை மற்றும் 07-01-2023 காரி(சனி)க் கிழமை அன்று நமது ஞானதேசிகர் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் வழிநடத்த கீழ்கண்ட நிகழ்ச்சி நிரலின்படி நடைபெற உள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாண்டு பொங்கல் தொடங்கி அன்பர்கள்

32 ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா

ஆன்மநேய அன்பர்களே! ஆண்டுதோறும் திருமந்திர முற்றோதலை நடத்தி வரும் எங்கள் அமைப்புகள் அதன் வரிசையில் 32ம் ஆண்டு முற்றோதல் விழாவை எடுக்கின்றன. இவ்வாண்டு திருமந்திர முற்றோதல் ஐந்தாம் சுற்றில் இரண்டாம்(2) தந்திரம் முற்றோதல் செய்யப்பட இருக்கிறது. கரோனா காரணமாக அரசின் அறிவுறுத்தலின்படி இவ்வாண்டு விழா நடைபெறுகிறது. அன்பர்கள் அதற்கேற்ப ஒத்துழைக்க அன்புடன் வேண்டுகிறோம். நாளும் நேரமும்: 01-01-2023 ; ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணி முதல் இரவு 9.00 மணி வரை இடம்: சேவா நகர் சமூக நலக்கூடம், சேவா

வள்ளலாரும் வழக்குகளும் – சன்மார்க்க சிறப்பு சொற்பொழிவு

சன்மார்க்க சிறப்பு சொற்பொழிவு : திரு. ச. திருச்சுடர் நம்பி "வள்ளலாரும் வழக்குகளும்" நாள்: 25-12-2022 -  நேரம்: 3.00 - 4.00  இடம்: P M P தனலட்சுமி மஹால், சத்துவாச்சாரி, வேலூர் மாவட்டம்    

100வது திருவாசக முற்றோதல்

100வது திருவாசக முற்றோதல் வணக்கம். நமது ஞானதேசிகர் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள், அசோக் நகர் ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயத்தில் 11 டிசம்பர் 2022 அன்று நடைபெற உள்ள 100வது திருவாசக முற்றோதல் நிகழ்வில் நூறு நூறு ஆயிரம் இயல்பினராகி என்ற தலைப்பில் பேச உள்ளார். வாய்ப்புள்ளோர் கலந்து கொள்ளவும். இடம்: ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயம், டாக்டர்.இராஜேந்திர பிரசாத் தெரு, சத்தியமூர்த்தி பிளாக், அசோக் நகர், சென்னை 600083. நேரம்: மாலை 4.00 மணி

Top