You are here
Home > அர்ச்சகர் பயிற்சி > தமிழ் அர்ச்சகர் பயிற்சி வகுப்பு – மாணவர் சேர்க்கை அறிவிப்பு – Tamizh Archakar Training

தமிழ் அர்ச்சகர் பயிற்சி வகுப்பு – மாணவர் சேர்க்கை அறிவிப்பு – Tamizh Archakar Training

விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

விண்ணப்பப் படிவம் – இங்கே பதிவிறக்கம் செய்க. Click here to Download Application Form

 

தமிழ் அர்ச்சகர் பயிற்சி வகுப்பு – 12ஆம் குழாம் மாணவர் சேர்க்கை

வணக்கம்!

பாடல் பெற்ற தமிழகக் கோயில்கள் அனைத்தும் தமிழிலேயே பாடல் பெற்றவை. ஒன்று கூட வடமொழியில் பாடல் பெறவில்லை. ஆனால் கோயிலுக்குள்ளே வேற்று மொழி வழிபாடு! இந்த நிலை மாற தமிழ் வழிபாட்டுப் பயிற்சி பெற வேண்டுமா? நமது கோயில்களில் நற்றமிழ் வழிபாடு நடைபெற வேண்டுமா?

தமிழக அரசு இந்து அறநிலையதுறை உயர் நிலை ஆலோசனைக்குழு (Advisory Committee)வில் உறுப்பினராக உள்ள டாக்டர் பட்டம் பெற்ற செந்தமிழ் வேள்விச் சதுரர் மு.பெ.சத்தியவேல் முருகனாரின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் SRM பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராயமும் இணைந்து நடத்தும் தமிழ் அருட்சுனைஞர் ஓராண்டு சான்றிதழ்ப் படிப்பின் 12ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைத் தொடங்கி விட்டது.

பிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமனை புகுவிழா உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகள், கோயில் குடமுழுக்கு மற்றும் நாட்பூசனைகள் ஆகியவை அடங்கிய 8 தனிப் பாடங்கள் தமிழாகமத்தின் வழி இரு பருவங்களாக (Semester) பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொன்றிலும் தேர்வு நடத்தி இறுதியில் SRM பல்கலைக் கழகத்தால் சான்றிதழ் வழங்கப்படும்.

சேர்க்கைக்கான தகுதிகள் :-

  • கல்வித் தகுதி 8 ஆம் வகுப்புத் தேர்ச்சி மற்றும் தமிழில் ஆர்வம்;
  • வயது – 15 வயதிலிருந்து 70 வரை 

சேர்க்கைக்கு சமர்ப்பிக்க வேண்டியவை  :-

  • நிரப்பப்பட்ட விண்ணப்பம்
  • கல்விச் சான்றிதழ் மின்நகல் (அதில் பிறந்த தேதி இருக்க வேண்டியது அவசியம். எ.கா: மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்)
  • ஆதார் கார்டு மின்நகல்
  • பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒன்று.

சேர்க்கைக்கு உரிய கல்வி கட்டணம் :-

  • ஆண்டு முழுமைக்கும் ரூ.10,000/- (ரூபாய் பத்தாயிரம்  மட்டுமே)
  • வரைவோலை (Demand Draft) மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். உரிய ரசீது உடனடியாக வழங்கப்படும்.
  • வரைவோலை  Theivathamizh Arakkattalai  என்ற பெயருக்கு எடுக்க வேண்டும். Payable at Chennai என இருக்க வேண்டும்.

சேர்க்கைக்கு அணுக வேண்டியவர் :-

தமிழ் அர்ச்சகர் படிப்பு ஒருங்கிணைப்பாளர் 
திரு. மா.கருப்புசாமி,
செயலாளர் – தெய்வத்தமிழ் அறக்கட்டளை,
செல்பேசி: +91 95000 45865

  • தபால் / கூரியரில் / இணையவழியில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
  • நேரில் தகுதிச் சான்றுகளை ஆய்ந்து மாணவர் சேர்க்கையானது நடைபெறும்
  • விண்ணப்பப் படிவங்களை தெய்வத்தமிழ் அறக்கட்டளை இணையங்களிலிருந்து (www.dheivamurasu.org, www.archakar.com ) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • விண்ணப்பப் படிவம் – இங்கே பதிவிறக்கம் செய்க. Click here to Download Application Form

  • விண்ணப்பங்கள் அலுவலகத்தில் வழங்கப்பட மாட்டாது.
  • மாணவர் சேர்க்கை 2023 மே மாதம் 31ஆம் தேதிக்குள் நிறைவு செய்யப்பட்டுவிடும்.

நேரடியாக பயிற்றுவிக்கும் இடம்: SRM பல்கலைக்கழகம், வடபழனி வளாகம், ஜவஹர்லால் நேரு சாலை, வடபழனி, சென்னை-26.

  • ஏற்கெனவே பலநூறு மாணவர்கள் சான்றிதழ் பெற்று செந்தமிழ் ஆகம அந்தணர்களாக இல்லச் சடங்குகளிலும், கோயில் பூசைகளிலும் களம் கண்டு வருகிறார்கள்.
  • கோயில்களில் தமிழே கொலுவிருக்க, வாழ்வியல் சடங்குகளில் வண்டமிழே வழிகாட்ட அரிதில் அமைந்துள்ள அருந்தமிழ் வாய்ப்பு!  இப்பயிற்சியைப் பயன் கொள்ள விரையுங்கள்!

 

(பின்குறிப்பு: மாணவர்கள் இந்தத் தகவலை, எந்த ஒரு மாற்றமும் செய்யாமல், தங்களுக்குத் தொடர்புள்ள மற்ற வாட்ஸாப் குழுக்களிலோ அல்லது மற்றைய சமூக ஊடகங்களிலோ பதிவேற்றம் செய்யலாம்)

 

Top