You are here
Home > 2013 (Page 2)

ஆழ்க தீயதெல்லாம்! அரன் நாமமே சூழ்க!

இன்று (7-10-2013) காலை தினமலர் நாளேட்டில் இனிய அற்புதமான செய்தி ஒன்று வந்துள்ளது. அந்தச் செய்தியை வாசகர்கள் அறிய அப்படியே அளித்திருப்பதை அடியில் காண்க:      “பெங்களூரு, அக்.7-கர்நாடக மாநிலம், குத்ரோலி கோகர் நாதேஸ்வரர் கோவிலிலே இரண்டு விதவைகள், அர்ச்சகர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர்.      ‘பரசுராமர் தேசம்’ எனப் போற்றப்படும் மங்களூரு மாவட்டம் குத்ரோலி கோகர்நாதேஸ்வரர் கோவிலில் தசரா விழாவை முன்னிட்டு, கணவனை இழந்த பெண்கள் இந்திர சாந்தி, லட்சுமி சாந்தி ஆகிய

Navarathiri – Toys and Dolls in Kolu – Is it a hobby !!!!

Navarathiri - Toys and Dolls in Kolu - Is it a hobby !!!! What is the real meaning of these toys and Dolls ? ? ? Well answered in the attached file, please read thru and Celebrate Navarathiri meaningfully. Please Download Pdf file

தமிழிசைச் சங்கத்தின் பண்ணாராய்ச்சி கலந்தாய்வுக் கூட்டம்

உ முருகா தமிழிசைச் சங்கத்தின் பண்ணாராய்ச்சி கலந்தாய்வுக் கூட்டம் -          செந்தமிழ்வேள்விச்சதுரர்    தமிழிசை இயக்கத்தின் முன்னோடியான ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் அவர்கள் உருவாக்கியது தமிழிசைச் சங்கம். இச்சங்கம் உருவாகிய நாள் 19-04-1943. இதற்கென உருவாக்கப்பட்ட மன்றம் தான் சென்னையில் உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உருவாகிய புகழ் பெற்ற அண்ணாமலை மன்றம். இம்மன்றம் திறந்து வைக்கப்பட்ட நாள்:21-10-1952. சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னால் இம்மன்றம் பல்லாண்டுகளாக தமிழிசைக்காக அமைதியாக நீதி கேட்டுக் கொண்டு நிற்கிறது!    இத்தமிழிசைச் சங்கத்தின்

புதிய தி இந்து தமிழ் நாளிதழ்க்கு பேருவகையுடன் தெய்வமுரசு வாழ்த்துக்கள்!

புதிய தி இந்து தமிழ் நாளிதழ்க்கு பேருவகையுடன் தெய்வமுரசு வாழ்த்துக்கள்! 16-9-2013-ஆம் நாள் காலை இனிதாக விடிந்தது! காலையில் கையில் தி இந்து என்ற புதிய தமிழ் நாளிதழ்! 135- ஆண்டுகட்குப் பின்னர் இந்து குழுமத்திற்கு தமிழ் நாளிதழினை நற்றமிழில அ நாடுலாவச் செய்திட வேண்டும் என்ற எண்ணம் தோன்றி முன்னம் வந்திருப்பது தமிழ் அன்னையின் திருவருளே! தெய்வமுரசு என்கிற விண்பதிப்பின் ஆசிரியர் என்ற முறையில் இந்நாளேடு புதியதாய் தொடங்கப்பட்டாலும் தமிழ் மக்கள்

சேய்த்தொண்டர் புராணம்

சேய்த்தொண்டர் புராணம் பகுதி-24 செந்தமிழ்மாருதன்   ஏப்ரல் 2013 இதழ் தொடர்ச்சி. . . மேல் இதழில் கச்சியப்பரின் தந்தையார் காளத்தியப்பர் காஞ்சி குமரகோட்டப் பூசையைக் கச்சியப்பரிடம் ஒப்படைத்து விட்டு விடுதலை பெற்றார் என்பதைக் கண்டோம். அந்த அற்புதமான கந்தன் பூசையைச் சிந்தை மகிழ கச்சியப்பர் நாடோறும் நடாத்த மேற்கொள்கிறார். காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி போது ஆறிலும் புவனம் புகழ பூசைகள் நடந்து வருகின்றன. ஒரு நாள் இரவு; கச்சியப்பர் கரணமெலாம் குழைய கனவில் முருகன் காட்சி தந்தான்.

பதிப்பாசிரியர் வீட்டில் பதினோராந் திருமுறை முற்றோதல்

பதிப்பாசிரியர் வீட்டில் பதினோராந் திருமுறை முற்றோதல்                                                   - பவனிப்புலவன் “உமாபதி ஐயா! எங்கே கிளம்பிட்டீங்க!” நான் திரும்பிப் பார்த்த போது நன்கு பழக்கமான ஒரு திருமுறை அன்பர் நின்றிருந்தார். போகும் போதே எங்க கிளம்பிட்டீங்க என்று ஒரு கேள்வியா? உருப்பட்டா மாதிரி தான் என்று நினைத்துக் கொண்டேன். வீட்டிற்குள் திரும்பி ஒரு டம்ளரில் தண்ணீர் குடித்து விட்டு வரலாமா என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே அந்த அன்பர் கேட்டார்: ‘ஐயா! ஒரு சோடா குடிக்கலாமா?

ஆசிரியர் மேசையிலிருந்து

ஆசிரியர் மேசையிலிருந்து . . . “தெரிகிறது விண்ணில் தெய்வமுரசு”         முந்துதமிழ் முருகன் அருளால் இப்போது தெய்வமுரசு இதழ் விண்ணில் ஏறிவிட்டது; மின்னத் தொடங்கிவிட்டது. ஏப்ரல் 2013 வரை தெய்வமுரசு மண்ணில் நல்ல வண்ணம் தெய்வத்தமிழைப் பரப்பிய நற்பணியை இனி விண்ணிலிருந்து வியக்கும் வண்ணம் ஆற்ற உள்ளது. சரியாக 9 ஆண்டுகள் 108 இதழ்களால் தெய்வத்தமிழுக்குத் தெய்வமுரசு மண்ணில் அருச்சனை செய்தது. இனி நமது நோக்கமாகிய தமிழருச்சனை விண்ணிலிருந்து நடைபெறும். ஏப்ரல் 2013-லிருந்து ஆகஸ்டு

சர்வ ஞான உத்தர ஆகமம் – தமிழில்

சர்வ ஞான உத்தர ஆகமம் – தமிழில் பகுதி – 13                                 - செந்தமிழ் வேள்விச் சதுரர் ஏப்ரல் 2013 இதழின் தொடர்ச்சி. . . இதுவரை 12 பகுதிகளில் முருகப்பெருமான் கேள்விகள் கேட்க சிவபெருமான் பதில் கூறி வருவதான சர்வ ஞான உத்தர ஆகமத்தின் ஒரு பகுதி வரை பார்த்து வந்தோம். சென்ற இதழில் பாவனை எத்தனை வகைப்படும், எந்த பாவனை பயன்படும் என்று விளக்கினார் சிவபெருமான். அதனை மேலும் விளக்கி துவித பாவனையை

சைவக் கேள்விச் சிற்றம்பலம்

சைவக் கேள்விச் சிற்றம்பலம் செந்தமிழ் வேள்விச்சதுரர் பகுதி – 12 ஏப்ரல் 2013 இதழ் தொடர்ச்சி . . . அறிவாகரர்: அன்பரே! யோகம் என்பதைப் பதஞ்சலி முனிவர் தான் முதலில் கண்டு பிடித்ததாகக் கூறியது எத்தனை பெரிய பொய் என்பதைச் சான்று காட்டி விளக்கினால் அம்பலத்தார் எல்லாம் ஆச்சரியப் படுவீர்கள். சிற்றம்பல அன்பர்: சொல்லுங்கள் ஐயா! நாங்களும் இன்னும் எங்களைப் போல இன்னும் உலகில் பலரும் எவ்வளவு அறியாமையில் இருந்து கொண்டிருக்கிறோம் என்பதைத் தங்களிடம் விவரங்களைக்

Top