You are here
Home > செய்திகள் (Page 6)

வரலாற்றில் மறைந்த வேலையாள்!!

உண்மையில் ஒருவர்க்கு வேலையாள் அமைவது என்பது உயர்ந்த வரம்; எல்லோருக்கும் அமையாது! சபாபதி என்று ஒரு பழங்கால திரைப்படம்; முதலாளி சோடா உடைத்துக் கொடு என்பார்; உடனே சபாபதி சோடா பாட்டிலை உடைத்து நீட்டுவான். இந்தக் கொடுமையை என்ன சொல்ல! ஆனால் திரைப்படம் முழுவதும் முதலாளி அந்த வேலையாளொடு தான் உழலுவான்! அந்தப் படமே அந்த வேலையாளின் முட்டாள்தன புராணம் தான்! இப்படி இருந்தும் அந்த வேலையாளை முதலாளி இறுதிவரை நீக்கவில்லை.

நயத்தமிழ் செய்த நன்மை

எதையும் நயமாகச் சொல்ல வேண்டும்; சொன்னால் அது கேட்பவருக்கு அர்த்தத்தையும் அளிக்கும்; ஆனந்தத்தையும் அளிக்கும். அதனால் நடக்காததையும் நடக்குவிக்கலாம். மனைவி இட்லியைப் பரிமாறுகிறாள்; கணவன் சொல்கிறான். "அட! தலையில் வைக்க வேண்டியதை இலையில் வைச்சுட்டியே!" என்கிறான். மனைவி என்னங்க என்று அலங்க மலங்கக் கேட்கிறாள். "ஒண்ணுமில்லை, இட்டிலி மல்லிப்பூ மாதிரி இருக்கே, அதைச் சொன்னேன்!" என்கிறான் கணவன். மனம் மகிழ்ந்து போன மனைவி இலையில் இன்னும் இரண்டு இட்டிலி வைக்கிறாள்.

கூத்தில் நடந்த கூத்து

"எடுத்த காரியங்களில் எல்லாம் அர்ப்பணிப்புடன் பணி ஆற்ற வேண்டும்.!" என்று பெரியோர் கூறுவது மரபு. இந்தப் பொன்மொழியை எழுதி தன் அறையின் நுழைவுக் கதவில் பதித்து வைத்திருந்தார் ஓர் அரசு அதிகாரி. அவரிடம் ஒருவர் மனுவோடு முறையிட்டார்: "ரொம்ப நாளா அலையறேங்க!" அதிகாரி சொன்னார்: "நுழைவுக் கதவை மறுபடியும் போய் பார்த்துவிட்டு வா! "மனுதாரர் பார்த்து விட்டு வந்து அந்த பொன்மொழியைச் சொன்னார். அப்புறம்! 'அர்ப்பணிப்பு' இல்லாம வேலை எப்படி நடக்கும்? என்று

விநோதமான வியாபாரம்

அறம் தான் தமிழர்க்கு உயிர்வளி (Oxygen). இங்கெல்லாம் முடியாது என்று உலகம் கருதும் வணிகத்திலும், போரிலும் கூட அறத்தைப் பின்பற்றி உலகிற்கே வழிகாட்டிய உன்னத இனம் தமிழ் இனம்; அதனால் அறப்போர் என்றும் அறவிலை வணிகம் என்றும் சொற்கள் தமிழில் மட்டும் தான் உண்டு. திடீர் தாக்குதல், மறைந்து தாக்குதல் என்பதை எல்லாம் இழிவாகக் கருதியவர்கள் தமிழர்கள்; வீரமன்று என்று ஒதுக்கியவர்கள். ஏழுதிணை அட்டவணை போட்டு, பூ காட்டி போர் காட்டியவர்கள்.

சிவபெருமான் சிறைக்குள்ளே!

உலகமே கரோனாவால் நடுங்கி ஒடுங்கிச் செத்துக் கொண்டிருக்கிறது. உலகின் எல்லா மூலையிலும் நடுக்கம்! மக்களின் நடுக்கத்தால் பூமியே சற்று வேகமாகச் சுற்றுகிறது, நமக்கு கடவுளின் மீதே கோபம் வருகிறது. சிவனை கருணாகரன் என்பர்; ஆனால் சிவன் இப்ப கரோனாகரன் ஆகிவிட்டான். ஆதிக்க நாடுகள் கூட பாதிக்கப்பட்டு மருந்துக்காகத் திருவோடு ஏந்தி தெருவோடு திரிகின்றன. இதுதான் மருந்து என்று கூட கண்ணில் காட்டாமல் இதென்ன நோய் என்று காறி துப்பலாமா என்றால்

உவமையில் வந்த உவகை

ஒரு புலவனின் உயர்வை அவன் கையாளுகிற உவமை புலப்படுத்தி விடும். அதுவே அவனைக் காட்டும் அளவுகோல். "பையன் சரியா மார்க் வாங்கலை சார்! அதனால் நேற்றைக்கு அவனுக்குத் தனி ஆவர்த்தனம் தான்! என்றால் அவர் மிருதங்கக்காரர்; அந்தப் புலவர் பேர் மாமூலனார் என்று சொன்னீங்களே, அவர் காவல் துறையைச் சேர்ந்தவரா என்று கேட்டால் கேட்டவர் யார் என்று தானே விளங்குகிறது. ஆகா உவமையைக் கொண்டே அவர் யார் என்று தெரிந்துவிடும். ஆனால்

பதைக்கையில் ஒரு பைந்தமிழ்ப் பரிந்துரை

இது நடந்தது ஒரு கப்பல் பயணத்தில். மொரீஷியஸ் நாட்டிற்கு விருந்தினராகச் சென்ற போது அன்பர்கள் ஒரு பெரிய உல்லாசக் கப்பலுக்கு அழைத்துச் சென்றனர். திடீரெனப் பெருமழை பெய்ததால் ஒரு நாள் இரவு கப்பலிலேயே தங்க வேண்டி இருந்தது. அன்பர்களின் அபரிமிதமான உபசரிப்பில் நன்றாகத் தூங்கிப் போனேன். திடீரெனப் பார்த்தால் புராணப் படங்களில் வருபவர் போல ராஜகம்பீரமாக ஒருவர் என் அருகே வந்தமர்ந்தார். சரியாகக் கணித்து விட்டீர்கள்! கனவு தான்! நான் படுக்கையிலிருந்து

பெரு நடிகரும் பைந்தமிழும்

பெரியபுராண உரை நூலில் மூழ்கி இருந்தேன். பொதுவாக நான் படிக்கும் போது தூங்குவதில்லை. ஆனால் தூங்கும் போதும் ஏதாவது ஒரு நூலை, அதில் உள்ள பாடலை மனம் தொடர்ந்து அசை போட்டுக் கொண்டே இருக்கும். அப்படி மனனமான பாடல்கள் பல. என்னவோ தெரியவில்லை அன்று பெரிய புராணத்தை படித்துக் கொண்டே தூங்கி விட்டேன். திடீரென்று பார்த்தால் கனவில் சேக்கிழார் வந்து நிற்கிறார்; பணிந்தேன்; "வா! போகலாம்" என்று அழைக்க அவருடன்

செப்பச் சிறந்த செந்தமிழ் நயம்

தமிழர் கட்டடக் காலை சிறப்பு உலகில் புகழ் பெற்றது. இதனை நெடுநல் வாடை, மதுரைக் காஞ்சி, புறநானூறு போன்ற சங்க நூல்களில் விரிவாகக் காணலாம். இப்போது ஒரு வர்ண நிறுவனம் கட்டடத்தையே 'லேமினேட்' பண்ணிப் பார்த்திருக்கிறீர்களா என்று சொல்வதைக் கேட்டுச் சிரிப்புதான் வருகிறது. வர்ணப் பூச்சால் அல்ல உலோகத் தகடுகளாலேயே "லேமினேட்' பண்ணவன் தமிழன். புலிகடிமால் என்ற மன்னன் செம்பு புரி புரிசை உடையவனாம். புரிசை என்றால் கோட்டை. வீட்டை

செவிமடுப்போம் செந்தமிழ் நயம்!

சிறியேன் சிறுவயதிலிருந்தே ஒரு பெருமை குறித்து மார்தட்டிக் கொள்வது உண்டு. அது நான் பிறந்த வேலூர் பற்றியது. உலகில் எந்நாட்டிலும் மண்ணில் ஏதேதோ விளைய, இங்கு மட்டும் மண்ணில் தமிழ் முருகனின் தனிவேல் முளைக்கிறதாம். சிறுபாணாற்றுப்படையில், திறல்வேல் நுதியிற் பூத்த கேணி விறல்வேல் வென்றி வேலூர்.' - (சிறுபாணாற்றுப்படை வரி 172 - 173) இத்தகைய சங்கப்பாட்டில் இடம் பெற்ற பெருமையுடைய வேலூரில் ஓர் ஆறு ஓடுகிறது; பெயர் பாலாறு. இன்று இது ஓடிய அடையாளத்துடன்

Top