You are here
Home > செய்திகள் (Page 16)

தமிழ் அருட்சுனைஞர் – மாணவர்களுக்கான பட்டயம் வழங்கும் விழா

தமிழ் அருட்சுனைஞர் பட்டயப்படிப்பு – 5 ஆம் குழாம் மாணவர்களுக்கான பட்டயம் வழங்கும் விழா 28 ஜனவரி 2017 சனிக்கிழமை அன்று வடபழனி SRM பல்கலைக்கழக கலையரங்கத்தில் நடைபெற்றது.

11 ஆம் திருமுறை முற்றோதல் – நிறைவு விழா (15-01-2017)

பேரன்புடையீர்! 11-ஆம் திருமுறை முற்றோதல் ஏறத்தாழ 7 ஆண்டுகளாக அன்பர்கள் பலர்  இல்லத்தில் சிறப்பாக நடத்திக் கொண்டு வந்தது அனைவரும் அறிந்ததே. இத்திருமுறை முற்றோதல் வரும் 15-1-2017-ல் இறைதிருவருளால் நிறைவு எய்துகிறது. ஒவ்வொரு முற்றோதல் நிகழ்ச்சியிலும் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்ததைப் போலவே இந்த நிறைவு விழாவிற்கு நமது அன்பர்கள் திரளாக வந்து கலந்து கொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம். இடம்: ஸ்ரீலிங்கம் மஹால், எண்:14, நேரு தெரு, பாரதிபுரம், குரோம்பேட்டை, சென்னை – 44 (பாரதிபுரம் விநாயகர் கோயில்

தெய்வமுரசு நற்றமிழ் நாட்காட்டி

தெய்வமுரசு நற்றமிழ் நாட்காட்டியின் சிறப்புகள் எண்ணிலும் எழுத்திலும் எல்லாக் கோணத்திலும் தூய தமிழ்ப்பெயர்கள் அமைந்த நாட்காட்டி. தமிழில் எண்களின் வரிவடிவம் உண்டா என்று அறியாத தமிழிளந் தலைமுறைக்கு அவற்றை அறிமுகப்படுத்தல். சாலிவாகன சகாப்தத்திற்கு வழியனுப்பி விடை தந்து திருவள்ளுவர் ஆண்டினை ஏந்தி எடுத்தல். 60 தமிழ் ஆண்டுகளின் பெயர்களையும் வடமொழி பெயர்களுக்கு பதிலாக பொருள் பொதிந்த புத்தம் புது தமிழ் இணைப் பெயர்கள் - வெம்முகம் (துன்முகி), பொற்றடை (ஏவிளம்பி) மதியால் பெயர் பெற்ற மாதங்களின் பெயரைத் தூய

பொங்கல் – தமிழர் திருநாள் – பகலவன் வழிபாடு

பண்டிகைகளை தமிழால் வழிபடுவோம். பொங்கல் - தமிழர் திருநாள்- பகலவன் வழிபாடு நூலின் விலை ரூ.30 எதற்காக பொங்கல் திருவிழா? அதிலும் இது தமிழர் திருநாள் என்று கூறப்படுகிறது. இங்கே தமிழ்நாட்டில் இது வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுவது போல வட நாட்டில் கொண்டாடப்பெறுவதில்லை என்பது கண்கூடு. அப்படியானால் இது தமிழர்களுக்கே உரிய திருவிழா என்பது நன்றாகத் தெளிவாகிறது. தமிழர்கள் எதையுமே ஆழ சிந்தித்து அழகான அடிப்படையில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் மரபுகளையும், வழிபாடுகளையும் தோற்றுவிப்பதில்

மார்கழி பாராயணத் தொகுப்பு நூல்

மார்கழி பாராயண தொகுப்பு நூல்(download pdf) வணக்கம். மார்கழி மாதம் தொடங்கிய உடன் நாம் தேடுவது பாராயணத்திற்கு உதவியாக ஒரு நூல். அதில் எல்லா பாடல்களும் ஒருங்கே இருந்தால் ஏதுவாக இருக்கும் என்பது. அதற்காக இதோ நமது குருபிரான் முதுமுனைவர். மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்களின் தந்தையார் திருப்புகழ் சிவம்.வேலூர்.மு.பெருமாள் அவர்கள் வழிகாட்டி உருவாக்கிய இந்த தொகுப்பு நூல் தங்கள் பயனுக்காக.

தீபாவளி வழிபடும் முறை

தீபாவளி vazhipadu

தமிழர்தம் பழம்பெரும் பண்டிகைகள்                                     பண்டிகை என்ற சொல்லைப் பண்டு+கை என பிரிக்கலாம். அதாவது பண்டைய கொள்கை, வழக்கு என்று பொருள். பண்டு தொட்டு வருகின்ற இறைவழிபாடு என தொடர்ந்து வருகின்றது. ஒவ்வொரு பண்டிகையும், ஒவ்வொரு காரணம் பற்றி ஒவ்வொரு தெய்வ மூர்த்தங்கள் (அதி தேவதைகள்) வழிபடப்படுகின்றன. நடைமுறையில் அவை கொண்டாடப்படுகின்றன. ஆனால் அவை கால மாற்றத்தால், அயல் இன அரசர்களால் கொள்கையளவில் மாற்றம் பெற்று இன்று பொருளற்ற பண்டிகையாய், வெறும்

வீசுகால் கோலம் – சிவத்திரு. திருச்சுடர்நம்பி அவர்களின் கண்டருளல் வருணனை

திருப்பரங்குன்றக் கோயிலின் தூணில்

  எற்றுக்கு விரைந்தீர்??!!! நல்லதொரு மாலை நேரத்தில், வானம் திருப்பரங்குன்றம் முருகப்பெருமானை கண்குளிரக் கண்டு வணங்க வரும் முருகனடியார்களை பன்னீர் தெளித்து வரவேற்பது போல நீர் தெளித்து மண்ணையும் மனதையும் குளிர வைத்துக் கொண்டிருந்தது. தமிழின் மணமும் அதன் குணமும் கொண்டு என்றும் இளமையாய் இருக்கும் அந்த மலை கிழவோனாகிய முருகப்பெருமானை நாளும் வணங்கி தமிழால் வழிபட்டு, எல்லோரையும் வழிபட நெறிவகுத்து, நனிசொட்ட சொட்ட பாடியும் பேசியும் பரவிவரும் குருபிரான் ஒருவர் தன்

Top