You are here
Home > செய்திகள் > 11 ஆம் திருமுறை முற்றோதல் – நிறைவு விழா (15-01-2017)

11 ஆம் திருமுறை முற்றோதல் – நிறைவு விழா (15-01-2017)

பேரன்புடையீர்!

11-ஆம் திருமுறை முற்றோதல் ஏறத்தாழ 7 ஆண்டுகளாக அன்பர்கள் பலர்  இல்லத்தில் சிறப்பாக நடத்திக் கொண்டு வந்தது அனைவரும் அறிந்ததே. இத்திருமுறை முற்றோதல் வரும் 15-1-2017-ல் இறைதிருவருளால் நிறைவு எய்துகிறது. ஒவ்வொரு முற்றோதல் நிகழ்ச்சியிலும் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்ததைப் போலவே இந்த நிறைவு விழாவிற்கு நமது அன்பர்கள் திரளாக வந்து கலந்து கொண்டு சிறப்பிக்க
அன்புடன் அழைக்கின்றோம்.

இடம்: ஸ்ரீலிங்கம் மஹால், எண்:14, நேரு தெரு, பாரதிபுரம், குரோம்பேட்டை, சென்னை – 44 (பாரதிபுரம் விநாயகர் கோயில் அருகில்)

நாள்: 15-1-2017 ஞாயிற்றுக் கிழமை
நேரம்: காலை 9 மணி முதல்

முற்றோதல் நிறைவுரை வழங்குபவர் : முதுமுனைவர் மு. பெ. சத்தியவேல் முருகனார்.

இவண்,
ஆதம்பாக்கம் அருந்தமிழ் வழிபாட்டு மன்றம்.

11 ஆம் திருமுறை முற்றோதல் – நிறைவு விழா (15-01-2017)(pdf download)

Top