உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் தென்னாப்பிரிக்கக் கிளைத் தலைவர் திரு மிக்கிச்செட்டி அவர்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் 21 பேருக்கு அருட்சுனைஞர் பட்டயப் படிப்பை பாரத் பல்கலைக் கழகத்தின் உலகத் தமிழாயம் தெய்வத்தமிழ் அறக்கட்டளையின் உதவியுடன் நடத்த முடிவு செய்து இன்று காலை 10.00 மணிக்கு பாரத் பல்கலைக் கழகத்தின் ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரியில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் மு.பொன்னவைக்கோ அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.