You are here
Home > செய்திகள் (Page 6)

புறநானூறு தொடர் சொற்பொழிவு 200வது பாடல்

வணக்கம். நமது ஞானதேசிகர், முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் உரையாற்றும் புறநானூறு தொடர் சொற்பொழிவு ஏறத்தாழ 11 வருடங்கள் 4 மாதங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருவது இதுவரை யாரும் செய்திடாத அரும்பெரும் சாதனை என்று தமிழ் கூறும் நல்லுலகத்தார் போற்றுவர் என்பது மறுக்கொணா உண்மை. அந்த அற்புத ஞானவேள்வியிலே தற்போது ஒரு முக்கிய பகுதியை வந்தடைந்துள்ளோம். 11 வருடங்கள் கழித்து 200வது பாடலை எட்டியுள்ளோம். இது ஒரு சிறந்த நிகழ்வு ஆகையால் இச்சிறப்பிற்கு சிறப்பு சேர்க்க

தமிழ் நாட்காட்டி 2021

தெய்வமுரசு நற்றமிழ் நாட்காட்டியின் சிறப்புகள் எண்ணிலும் எழுத்திலும் எல்லாக் கோணத்திலும் தூய தமிழ்ப்பெயர்கள் அமைந்த நாட்காட்டி. தமிழில் எண்களின் வரிவடிவம் உண்டா என்று அறியாத தமிழிளந் தலைமுறைக்கு அவற்றை அறிமுகப்படுத்தல். 60 தமிழ் ஆண்டுகளின் பெயர்களையும் வடமொழி பெயர்களுக்கு பதிலாக பொருள் பொதிந்த  தமிழ் இணைப் பெயர்கள் – வெம்முகம் (துன்முகி), பொற்றடை (ஏவிளம்பி), அட்டி (விளம்பி) மதியால் பெயர் பெற்ற மாதங்களின் பெயரைத் தூய தமிழால் வழங்குதல். அமாவாசை –

10 ஆம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் படிவிழா

சேந்தன் அன்பர்களே!! வணக்கம். இறைவன் திருவருளாலும் குருவருளாலும் இந்த ஆண்டு (2021) வள்ளிமலை படிவிழா மற்றும் மலைவல விழா ஜனவரி 9 மற்றும் 10 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. அவ்விழாவிற்கான அழைப்பிதழை இணைத்துள்ளேன். அனைவரும் வருக! அருள்நலம் பெறுக!! (மேலதிக விவரங்களுக்கு அழைப்பிதழை காணவும்) இங்ஙனம் தெய்வத்தமிழ் அறக்கட்டளை உறுப்பினர்.

தமிழர் மாண்பும் தவறிழைத்த உரைகாரர்களும்

உ தமிழர் மாண்பும் தவறிழைத்த உரைகாரர்களும் ஆசிரியர்: செந்தமிழ் வேள்விச்சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் மதிப்புரை: நயத்தமிழ் நெஞ்சன் ச.மு.தியாகராசன் Buy this Book       தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு இதுவரை 120 நூல்களை இயற்றியருளியவர் நம் ஞானதேசிகர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள். வழிபாட்டு நூல்கள், நாடகம், செய்முறைப் பயிற்சி நூல்கள், வேத நூல்கள், ஆகம நூல்கள், வாழ்வியல் சடங்குகள், கோவில் விழாக்கள், பண்டிகைகள், தனித்தமிழ் நாட்காட்டி, பஞ்சாங்கம், போற்றித்திரட்டு, ஆங்கில உரைகள், மறுப்பு நூல்கள், என

கார்த்திகை தீபத்திருநாள் சிறப்புச் சொற்பொழிவு

வணக்கம். நமது ஞானதேசிகர், முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் கார்த்திகை தீபத்திருநாள் சிறப்புச் சொற்பொழிவாக கற்பனை களஞ்சிய நம்பி துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றிய "சோணசைல மாலை" என்ற தலைப்பில் நவம்பர்  28ஆம் தேதி சனிக்கிழமை அன்று இந்திய நேரப்படி மாலை 5.30 மணி அளவில் சொற்பொழிவு ஆற்ற உள்ளார்.   தாங்கள் எல்லோரும் தெய்வமுரசு YouTube channel நேரலையில் குறித்த நேரத்தில் இணைந்தால் அச்சொற்பொழிவினை கண்டும் கேட்டும் மகிழலாம்.

12 ஆம் ஆண்டு கந்தன் கவினாறு (கந்த சஷ்டி) விழா

12 ஆம் ஆண்டு கந்தன் கவினாறு (கந்த சஷ்டி) விழா 15-11-2020 முதல் 20-11-2020 வரை முருகு தமிழ் மெய்யன்பர்களே! வணக்கம். மேற்படி இவ்வமைப்பு நடத்தும் தனது 12 ஆம் ஆண்டு கந்தன் கவினாறு விழா உலகையே அலைக்கழிக்கும் கொடிய கொள்ளை நோய்க்கிருமி கொரோனாவின் இரண்டாம் அதிவேகப் பரவல் காரணமாக அரசு வழிகாட்டுதலின் படி மிக எளிமையாக நிகழ்நிரலின்படி நடைபெறும். அன்பர்கள் வீட்டிலிருந்தபடியே வான்வெளி இணைப்பு செயலி (Zoom) மற்றும் (YouTube) https://www.youtube.com/channel/UCwPmBked-THRArDq79wFcrA

ஆயுத பூசை வழிபாடு ஏன்? .. ஓர் ஆய்வுரை

வணக்கம். நமது ஞானதேசிகர், முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் விழாக்கால சிறப்புச் சொற்பொழிவு ஆற்றும் நிகழ்வு அக்டோபர் 24ஆம் தேதி சனிக்கிழமை அன்று இந்திய நேரப்படி மாலை 6.30 மணி அளவில் நடைபெற இருக்கிறது.  தாங்கள் எல்லோரும் தெய்வமுரசு YouTube channel நேரலையில் https://www.youtube.com/channel/UCwPmBked-THRArDq79wFcrA குறித்த நேரத்தில் இணைந்தால் அச்சொற்பொழிவினை கண்டும் கேட்டும் மகிழலாம். ஆயுத பூசை வழிபாடு ஏன்? .. ஓர் ஆய்வுரை

தமிழிசைப் பயிற்சி

திருமுறை பண்ணிசைப் பயிற்சி : வாரந்தோறும் திங்கட்கிழமை மாலை 6.30PM IST அளவில் வகுப்பு நடைபெறும் திருப்புகழ் இசைப் பயிற்சி : வாரந்தோறும் புதன்கிழமை மாலை 6.30PM IST அளவில் வகுப்பு நடைபெறும் திருவருட்பா இசைப் பயிற்சி : வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலை 6.30PM IST அளவில் வகுப்பு நடைபெறும் இவ்வகுப்புகள் ஆவணி மாதம் முதல் நாள் தொடங்கி (ஆகஸ்ட் 17, 2020) முறையாக வாரந்தோறும் நடைபெறும். வகுப்புகள் இணையவழி வகுப்பாக Zoom மூலம் நடைபெறும்.

நாடே பரிசாகப் பெற்ற நாவலர்

தமிழ் எப்படி வளர்ந்தது? தண்ணீர் ஊற்றியா? தழை உரம்? பாஸ்பேட்? இல்லை. புலவர்களுக்குத் தமிழ் இன்பம் அறிந்த மன்னர்கள் அவ்வப்போது அளித்த பரிசில்களால்! ஒருவன் பெற்ற பரிசிலைப் பார்த்து இன்னொரு புலவன் தமிழ் ஆற்றல்களை எல்லாம் நாடோறும் வளர்த்து வளர்த்து மன்னர்களிடம் சென்று திறங்காட்டி, உரங்காட்டி, தெவிட்டாத இனிமை காட்டிப் பெற்ற பரிசில்களால் வளர்ந்தது தமிழ்! சும்மா ஓர் எண்ணம் தூண்ட புலவர்கள் என்னென்ன வெல்லாம் பரிசில்களைப் பெற்றார்கள் என்று இலக்கியங்களில்

Top