17ம் ஆண்டு கந்தன் கவினாறு (கந்த சஷ்டி) விழா
October 22 @ 5:00 pm – October 27 @ 8:30 pm

17ம் ஆண்டு கந்தன் கவினாறு (கந்த சஷ்டி) விழா
முருக நேய அன்பர்களே!!
ஆதம்பாக்கம் அருந்தமிழ் வழிபாட்டு மன்றம் தொடர்ந்து நடத்தும் 17ம் ஆண்டு கந்தன் கவினாறு (கந்த சஷ்டி) விழா, 22-10-2025 தொடங்கி 27-10-2025 வரை நாள்தோறும் மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது. அந்நிகழ்வின் அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன். நிகழ்ச்சி நிரலில் உள்ளபடி நமது குருநாதர் ஞானதேசிகர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் உரையும் மற்றும் அவர்கள் நெறிப்படுத்த நாடறிந்த அறிஞர் பெருமக்கள் உரையும் நடைபெற உள்ளன.
அனைவரும் கலந்துகொண்டு கந்தவேள் கருணை நலத்தைப் பெற்றிட வாரீர்!!!
நன்றி
ஆதம்பாக்கம் அருந்தமிழ் வழிபாட்டு மன்றம்