You are here
Home > Posts tagged "thirumurai"

நஞ்சி இடைஇன்று ஏழாம் திருமுறை திருமுதுகுன்றம் விருத்தாசலம்

நஞ்சி இடைஇன்று நாளையென் றும்மை நச்சுவார் துஞ்சியிட் டாற்பின்னைச் செய்வதென் னடிகேள்சொலீர் பஞ்சி யிடப்புட்டில் கீறுமோபணி யீரருள் முஞ்சி யிடைச்சங்கம் ஆர்க்குஞ் சீர்முது குன்றரே. 1 ஏரிக் கனகக் கமல மலரன்ன சேவடி ஊரித் தனையுந் திரிந்தக் காலவை நோங்கொலோ வாரிக் கட்சென்று வளைக்கப் பட்டு வருந்திப்போய் மூரிக் களிறு முழக்க றாமுது குன்றரே. 2 தொண்டர்கள் பாடவிண் ணோர்க ளேத்த உழிதர்வீர் பண்டகந் தோறும் பலிக்குச் செல்வதும் பான்மையே கண்டகர் வாளிகள் வில்லி கள்புறங் காக்குஞ்சீர் மொண்டகை வேள்வி முழக்க றாமுது குன்றரே. 3 இளைப்பறி

Top