You are here
Home > கட்டுரைகள் > முருக பக்தி மாநாடு 2018 – பாலயோகி சுவாமிகள் – வாழ்த்துப்பா

முருக பக்தி மாநாடு 2018 – பாலயோகி சுவாமிகள் – வாழ்த்துப்பா

தவத்திரு பாலயோகி சுவாமிகள்
முதல்வர், திருமுருகன் திருவாக்கு திருப்பீடம் மலேசியா
புரவலர் – மாநாட்டுக் குழுவின் அருட்தலைவர்

தகைசால் தவப்பெரியீர்!
பாதம் பணிகின்றேன். மேற்படி மாநாட்டில் தங்கள் அருளால் கலந்து கொள்ளும்
வாய்ப்பு பெற்றேன்.

மாநாட்டில் ஒவ்வொரு சமயமும் ஒன்றிற்கும் பற்றா அடியேனைக் கண்டபோதெல்லாம்
தங்களது அருகமர்த்தி அன்பு செய்தீர்கள். அந்தத் தண்ணளியை என்றும்
மறவேன்! கண்ணப்பரைக் குடுமிநாதர் மாறிலா வலத்தமர்வாய் என்று அழைத்து அமர்த்திக்
கொண்டது போலிருந்து!

‘அடியார்கள் முன்னியது முடித்தலின் முருகொத்தீயே’ என்ற பறநானூறு வாக்கு இங்கே
நினைவிற்கு வருகிறது. முருகனே முன்னின்றால் முடியாதொன்றுண்டோ!முருகன் தங்கள்
வடிவில் தானே மாநாட்டை நடாத்தினான்! வெற்றிக்கு கேட்க வேண்டுமோ?


வாழ்த்துப்பா

பண்டைத் தவஞ்சான்ற பாலயோகி பாங்குறவே
கண்டமா நாட்டின்மேல் காட்சியுண்டோ – வண்டமிழ்சேர்
மாவிலங்கை மேனாளில் மூண்ட கறை கழுவி
தூவிலங்கை  யாய்ப் பொலிந்த  தே!

அன்பன்,
மு. பெ. சத்தியவேல் முருகன்.

 

Top