You are here
Home > செய்திகள் (Page 13)

தமிழ் வழிபாட்டுக் கொள்கைப் பரப்புப் பயணத் தொடக்க விழா

பயண நிகழ்ச்சி விவரம். 22/3/18 காலை 9 மணி பயணத்தொடக்க விழா சென்னை காமராசர் அரங்கம் 23/3/18 திருத்தணி வெள்ளிக் கிழமை காலை 9 மணி பாக்யலட்சுமி திருமண அரங்கம் 23/3/18 வள்ளிமலை மாலை 5 மணி அறுபடைவீடு கோயில் 24/3/18 காஞ்சிபுரம் காரிக் கிழமை காலை திருநீலகண்ட நாயனார் திருமண மண்டபம், பெரிய காஞ்சிபுரம் 24/3/18 குன்றத்தூர் மாலை 5 மணி தெய்வச் சேக்கிழார் மணி மண்டபம்  தொடர்புக்கு: 9380919082   தமிழ் வழிபாட்டுக் கொள்கைப் பரப்புப் பயணத் தொடக்கவிழா அழைப்பிதழ்

சிவராத்திரி வழிபாடு, செந்தமிழாகம சிவபூசை செய்வது எப்படி ?

sivapoosai, sivarathri poojai

பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்:10) சிவராத்திரி வழிபாடு ஆசிரியர் : செந்தமிழ்வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் பொருளடக்கம்: சிவலிங்க வழிபாட்டின் உள்ளுறை சிறப்பேற்றும் சிவராத்திரி செந்தமிழாகம சிவபூசை செய்வது எப்படி ? சுத்த சிவபூசை வழிபாட்டு முறைகள் சம்மிதா (உருவிரி) மந்திரங்கள் நூலின் விலை: ரூ. 50/- (பக்கங்கள்: 104) தொடர்புக்கு: 9445103775 9380919082

சிறப்புத் தமிழ்த்தாய் வேள்வி

தமிழ்த்தாய் வேள்வி - விஜயேந்திரர் தமிழ்த்தாயை அவமதித்த செயலுக்குக் கழுவாயாக (பரிகாரமாக). தமிழ் அமைப்புகள் ஒரு சிறப்புத் தமிழ்த்தாய் வேள்வி ஆற்றி தமிழ்த்தாயின் பொற்பு காத்துப் பொலிவு தூக்க முடிவு செய்துள்ளன. வேள்வி மற்றும் வீறு தமிழ் உரைகள் இடம்பெறும். இடம்: மங்கையர்கரசியார் ஆலயப்பணிக்குழு, சித்திவிநாயகர் கோயில் குறுக்குத் தெரு (பத்ரகாளி கோயில் தெரு எதிரில்) 4வது தெரு, கிழக்குபானு நகர், அம்பத்தூர், சென்னை 53. நாள்: 4-2-2018. நேரம்: மாலை 3.00

தனித்தமிழ் நாட்காட்டி 2018

தமிழ் நாட்காட்டி thamizh calendar 2018

தெய்வமுரசு நற்றமிழ் நாட்காட்டியின் சிறப்புகள் எண்ணிலும் எழுத்திலும் எல்லாக் கோணத்திலும் தூய தமிழ்ப்பெயர்கள் அமைந்த நாட்காட்டி. தமிழில் எண்களின் வரிவடிவம் உண்டா என்று அறியாத தமிழிளந் தலைமுறைக்கு அவற்றை அறிமுகப்படுத்தல். 60 தமிழ் ஆண்டுகளின் பெயர்களையும் வடமொழி பெயர்களுக்கு பதிலாக பொருள் பொதிந்த  தமிழ் இணைப் பெயர்கள் – வெம்முகம் (துன்முகி), பொற்றடை (ஏவிளம்பி), அட்டி (விளம்பி) மதியால் பெயர் பெற்ற மாதங்களின் பெயரைத் தூய தமிழால் வழங்குதல். அமாவாசை –

27 ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா

முனைவர் கோ. விசயராகவன், இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை/உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தெய்வமுரசு தமிழ் நாட்காட்டியை வெளியிட்டார்

27-ம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா விழா அழைப்பிதழ்  இடம்: V M ஹால் 8/E,2 வது தெரு. V V காலனி, ஆதம்பாக்கம் சென்னை 600 088 நாள்: 01-01-2018 திங்கட்கிழமை நேரம்: காலை 8.30 முதல் இரவு 9.00 மணி வரை நிகழ்ச்சி நிரல்: அழைப்பிதழ் (PDF) 6--ஆம் தந்திர முற்றோதல் திருமுறை விண்ணப்பம், தமிழ்நாட்காட்டி வெளியீடு, திருமந்திர வினா விடை அரங்கம் திருமுறை இசைஅரங்கம் விருதரங்கம் பொருட்டமிழ் வேதப்பீடும் பெருமையும்

மதிப்புரை – தமிழரின் வேதம் எது ? ஆகமம் எது? & அறத்தமிழ் வேதம்

arthamizh vedham tamizh vedham

உ தமிழரின் வேதம் எது ? ஆகமம் எது? & அறத்தமிழ் வேதம் ஆசிரியர் : செந்தமிழ்வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் மதிப்புரை நயத்தமிழ் நெஞ்சன் ச.மு.தியாகராசன்   நீண்ட காலமாக தமிழ் வேதம் எது? தமிழரின் வேதம் எது என்று புரிபடாமல் தமிழர்கள் எதை எதையோ நம்முடைய வேதம், ஆகமம் என்று மருண்டு அதில் அலைப்புண்டு இருக்கையில் வாராது வந்த மாமணி போல் இறைதிருவருளால் தற்போது வெனி வந்துள்ளவை தான் மேற்படி நூல்கள்.     முருகப்

பொருட்டமிழ் வேதம் – மதிப்புரை

பொருட்டமிழ் வேதம் தொகுப்பாசிரியர்: செந்தமிழ் வேள்விச்சதுரர், முதுமுனைவர் மு.பெ. சத்தியவேல் முருகனார்      மதிப்புரை: நயத்தமிழ் நெஞ்சன் ச.மு. தியாகராசன் தமிழ் நூல் வேத வெளியீடுகளில் தற்போது நடை பயின்று வருவது இரண்டாம் வேதமாகிய 'பொருட்டமிழ்' வேதமாகும். அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு என்பதற்கொப்ப பொருள் என்பது இன்று நாம் பயன்படுத்தும் பலவிதமான பொருட்களை மட்டும் குறித்த சொல் அல்ல.  நம் புறவாழ்க்கை தொடர்புடைய அனைத்து விஷயங்களும் இதில் அடங்கும்.  இதை நமது பண்டைய

இன்பத்தமிழ் வேதம்

                                                                                      இன்பத்தமிழ் வேதம் சொல்வது காதலின் சிறப்பு – காதலர்களின் அகநிலை, புறநிலைக் கடமைகள் ஆகியனவாம்! இன்பம் சார்ந்த வாழ்க்கை அருமையானது! பொறுப்புகள் மிகுதியும் உடையது! காதல் வாழ்க்கையில் எல்லோரும் சிறப்படைய முடியாது, சிலரே வெற்றிபெற இயலும்! “மலரினும் மெல்லிது காமம் சிலரதன்செவ்வி தலைப்படு வார்” என்பது திருக்குறள். பொருளும் அறமும் சிறக்க நன்மக்கள் தேவை. நன்மக்களைத் தருவது இல்லறமே! அதனால் நாட்டின் வரலாற்றைச் சீராக இயக்கக்கூடிய இல்லறத்திற்கு அடிப்படையான “இன்பத்துப்பால்” இரண்டு பகுதிகளாக

வீட்டியல் தமிழ் வேதம்

ஈதல் அறம் தீவினைவிட்டு ஈட்டல் பொருள் காதல் இருவர் கருத்தொருமித்து – ஆதரவு பட்டதே இன்பம் பரனைநினைந்து இம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு. ஔவையார் தனிப்பாடல் அறம் பொருள் இன்பம் ஆகிய மூன்று நெறிகளில் முறையாக வாழ்ந்த மாந்தர் நிறைவாக இம்மூன்றையும் விட்டு சிறப்பெனும் செம்பொருள் காண்கின்ற நெறியில் நிற்பது தான் வீடு. காமஞ் சான்ற கடைக்கோட் காலை ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே. என்ற தொல்காப்பிய சூத்திரம் தமிழர்களின் வீட்டியல் நெறியை

ஆடல் வல்லான் ஆதிரை வழிபாடு (ஆருத்ரா தரிசனம்) பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்: 8)

thiruvathirai-vazhipadu-arudhra-dharisanam

ஆடல் வல்லான் ஆதிரை வழிபாடு (ஆருத்ரா தரிசனம்) ஆடல் வல்லான் என்று தமிழிலும் நடராசர் என்று வட மொழியிலும் அழைக்கப்படும் இத்திருவுருவ வழிபாடு முழுக்கு முழுக்க தமிழர் வழிபாடு; இத்திருவுருவத்தை இறையருளால் கண்டறிந்து அமைத்தவர்கள் ஆன்றவிந்தடங்கிய தமிழ் அருளாளர்களே. அதனால் தான் நடராஜ மூர்த்தத்தைக் கொண்டாடும் கோயில் தமிழ் நாட்டைத் தாண்டினால் இந்தியாவில் வேறெங்கும் காண முடியாது. தமிழ் எவ்வளவு தொன்மையானதோ அவ்வளவு தொன்மையானது இந்த ஆடல் வல்லான் திருவுருவமும் வழிபாடும். ஆருத்ரா தரிசனம்

Top