‘அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே!’ நம் இந்தியத் திருநாடு நள்ளிரவில் சுதந்திரம் பெற்றது. சுதந்திரம் அளிக்கிறோம் என்ற முடிவை நேருவிடம் ஆங்கில அதிகாரி மெளண்ட்பேட்டன் நள்ளிரவில் கூறினார். நேருவிற்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லையாம்! உடனே சுதந்திரத்தை அறிவித்து நம்மவர் அரியணை ஏறும் அதிகாரபூர்வ விழாவிற்கு நேரு ஏற்பாடு செய்வதில் முனைந்தார். அவரோ சடங்குகள், மதங்களில் பழக்கப்பட்டவரல்லர். எனவே, இராஜாஜி அவர்களிடம் கூறினார். அந்த மூதறிஞர் உடனே திருவாவடுதுறை ஆதீனத்தைத்
கட்டுரைகள்
ஆடித் தள்ளுபடியா – சரி, ஆடியே தள்ளுபடியா?
ஆடித் தள்ளுபடியா - சரி ஆடியே தள்ளுபடியா? ‘காலம் பொன் போன்றது' என்ற பொன்மொழி எல்லா மொழிகளிலும் சொல்லப்படுவதைக் காண்கின்றோம். காலச் சக்கரத்தின் ஒரு பல் ஆடித்திங்கள். ஆனால் அது மட்டுமே ஆண்டின் ஏனைய மாதங்களைத் தவிர்த்து தனி முள்ளாகச் சிலரைக்குத்துவது தான் ஏன் என்று தெரியவில்லை. “ஆடியில் புதிதாகக் குடித்தனம் போக வேண்டாம்!" "ஆடியா? ஆடி போகட்டும்! அப்புறம் பார்த்துக்கலாம்". “ஆடி வேண்டாம்னு ஐயர் சொல்றாரே!" இந்த மாதிரி பேச்சுக்களை-இல்லை,
சிறப்பேற்றும் சிவராத்திரி
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு
தெய்வமுரசு - பிப்ரவரி 2008 இன்று 29-1-2008 சட்ட மன்றத்தில் தை முதல் நாளை இனி தமிழ்ப் புத்தாண்டு தினமாகக் கொள்வதென சட்ட முன்னாக்கம் மன்றத்தின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது. ஆ! இதைவிட மகிழ்ச்சியான செய்தி வேறென்ன இருக்க முடியும்? இது தமிழறிஞர்களின் எத்தனை நாள் கனவு? இது தமிழ் மூதாதையர்களின் எத்தனை நாள் தினவு! காலையில் எழுந்து எந்த வானொலியைத் திருப்பினாலும் சில தொலைக்காட்சிகளைத் திருப்பினாலும் கட்டைக் குரலில் சக ஆண்டு என்று ஆண்டுப்
திருவண்ணாமலை கார்த்திகைத்தீப வெண்பா
நவராத்திரியில் பொம்மைகளை அடுக்குவதில் பொருள் உண்டா? பொழுது போக்கா?
திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும்
ஆடை – ஆலயம் – அவசரத்தீர்ப்பு – ஓர் ஆய்வு
தெய்வமுரசு ஆசிரியர் மேசையிலிருந்து... (செந்தமிழ் வேள்விச் சதுரர் மு.பெ.சத்தியவேல் முருகனார்) ஆடை - ஆலயம் - அவசரத்தீர்ப்பு - ஓர் ஆய்வு தீர்ப்பும் விவாத விவரமும் புதிய தலைமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர் ஒருவர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளையானது கோயில்களில் உடைக்கட்டுப்பாடு பற்றி ஆணை பிறப்பித்திருக்கிறது; அது பற்றி விவாத மேடையில் கலந்து கொண்டு தங்கள் கருத்தைக் கூற முடியுமா என்று 01.01.2016-ஆம் நாள் என்னைக் கேட்டார். அன்று வேறு
ஆகமங்கள் தடையா! உண்மை என்ன? அலசுவோம்
செந்தமிழ் வேள்விச்சதுரர் மு.பெ.சத்தியவேல்முருகன் ஆகமங்களை மாற்றவே முடியாதா? என்ற தலைப்பில் ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஞாயிறு அரங்கம் பகுதியில் ஓய்வுபெற்ற நீதிபதி. திரு. கே.சந்துரு அவர்கள் எழுதியுள்ள கட்டுரை பெரும் ஆச்சரியத்தை எனக்கு ஏற்படுத்தியது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசின் திட்டத்தை எதிர்த்து மதுரை மீனாட்சியம்மன் ஆலய பட்டர்கள் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் பிரதிவாதிகளில் ஒருவனாக இணைமனு (Impleading Petition) தொடுத்தவன் நான். அரசு நியமித்த அர்ச்சகர்
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும் உள்ளுறை தெளிவும்
உ முருகா அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் - உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும் உள்ளுறை தெளிவும் ***** செந்தமிழ் வேள்விச் சதுரர் மு.பெ.சத்தியவேல் முருகன் 16-12-2015; இந்த நாள் வரலாற்றில் இணையற்ற பதிவை ஏற்ற நாள். அன்று நான் IBC தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் ‘நற்சிந்தனைகள்’ என்ற நிகழ்ச்சிக்கான ஒளிப்பதிவிற்காகச் சென்றிருந்தேன். இந் நிகழ்ச்சி இங்கு பதிவு செய்யப்பட்டு இலண்டன் மாநகரிலிருந்து உலகமெங்கும் ஒளிபரப்பப்படும். நாள்தோறும் காலை நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட வேண்டியதை ஒரு மாதத்திற்கு முன்பதிவு செய்துவிடுவார்கள். இதற்காக அந்த









