உ முருகா வெளிச்சத்தின் வீச்சில் . . முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் “வேள்வி” – (4) சென்ற பகுதியில் ஆரியர்கள் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் நுழைவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னமே ஏறத்தாழ 20000 ஆண்டுக்கு முற்காலத்தில் தமிழர்கள் வேள்வியினைக் கடல்கோளால் மூழ்கிப் போன குமரிக்கண்டம் என்ற தென்கோடியில் ஆற்றினர் என்பது நிறுவப்பட்டது. அப்படி வேள்வி செய்த மன்னர்களில் முதன்மையானவன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டியன் என்பதும் அவன், ஆரிய வேதங்கள் இந்தியாவின் வடபகுதியை எட்டிக்
வெளிச்சத்தின் வீச்சில் – வேள்வி (3)
உ முருகா வெளிச்சத்தின் வீச்சில் . . . முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் “வேள்வி” – (3) “வேள்வி” – (2)வில் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி செய்த வேள்வி தமிழ்வேதப்படி நடத்தப்பட்டது என்பதைச் சான்றுகளுடன் நிறுவினோம். இனி இந்த வேள்வி அந்தப் பாண்டியனால் எக்காலத்தில் நடத்தப்பட்டது என்பது சிந்தனைக்குரியது. நல்ல வேளையாக புறநானூற்றிலேயே இதற்குரிய தகவல் கிடைக்கிறது. புறநானூற்று 9 ஆம் பாடல் இத்தகவலை அளிக்கிறது. இப்பாடல் மேற்கண்ட பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி
வெளிச்சத்தின் வீச்சில் – வேள்வி (2)
முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் வேள்வி (1) என்ற பகுதியில் கண்ட சிந்தனையை மேலும் தொடர்கிறோம். வேள்வி தமிழருக்கே உரியது என்பதையும் அது ஆரியருடையது அல்ல என்பதையும் ஆரியரின் இரிக் வேத மேற்கோள்கள் சிலவற்றைக் காட்டி நிறுவினோம். சரி, வேள்வி தமிழரது தான் என்றால் தமிழ் இலக்கியங்களில் வேள்வியைப் பற்றி என்ன கூறப்படுகிறது என்பதை இப்பொழுது காண்போம். முதலில் வேள்வியைப் பற்றிச் சிறப்புற வேறு வேள்விகட்கும் தமிழ் வேள்வி க்கும் உள்ள ஒப்பீடு காட்டி
தமிழ் போற்றி வழிபாடு – வடபழனி முருகன் கோவில்
மதிப்புரை – சைவ வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு
சைவ வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு ஆசிரியர் : செந்தமிழ் வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் மதிப்புரை : அவிரொளி சிவம் ச. மு. தியாகராசன் இதுகாறும் தமிழ்ச் சமூகத்திற்குக் குறிப்பாக சைவ சமய உலகத்திற்குப் பயன்படும் வகையில் பல (பத்ததிகளை) செய்முறை கருவி நூல்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தி வரும் நம் ஆசிரியர் நாம் வழிபடும் தெய்வங்களுக்கும் அருளாளர் அடியார்களுக்கும் உரிய போற்றிகளை 16 இல் தொடங்கி நூற்றெட்டு, முந்நூற்றெட்டு, ஐநூறு
8ஆம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் படிவிழா
சைவ-வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு
மதிப்புரை சைவ-வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு இயற்றித் தொகுத்த ஆசிரியர்: செந்தமிழ் வேள்விச்சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் பக்கங்கள்: 500 விலை: ரூ 350 தொடர்புக்கு: +919445103775 போற்றியைச் சொன்னால் அது என்ன பலம் தரும் என்று அப்பர் சொல்கிறார். அது மந்திரச் சொல் ஆயிற்றே! ஏதாவது பலன் தர வேண்டுமே! என்ன பலம் தரும் என்று அப்பர் பாடுவதைப் பாருங்கள். முத்தூரும் புனல் மொய்யரி சிற்கரைப் புத்தூரன்அடி போற்றி என்பாரெல்லாம் பொய்த்தூரும்புலன் ஐந்தொடும் புல்கிய மைத்தூரும் வினை மாற்றவும் வல்லரே. போற்றி மந்திரச் சொல்லாய்
தமிழ் நாட்காட்டி 2019
தெய்வமுரசு நற்றமிழ் நாட்காட்டியின் சிறப்புகள் எண்ணிலும் எழுத்திலும் எல்லாக் கோணத்திலும் தூய தமிழ்ப்பெயர்கள் அமைந்த நாட்காட்டி. தமிழில் எண்களின் வரிவடிவம் உண்டா என்று அறியாத தமிழிளந் தலைமுறைக்கு அவற்றை அறிமுகப்படுத்தல். 60 தமிழ் ஆண்டுகளின் பெயர்களையும் வடமொழி பெயர்களுக்கு பதிலாக பொருள் பொதிந்த தமிழ் இணைப் பெயர்கள் – வெம்முகம் (துன்முகி), பொற்றடை (ஏவிளம்பி), அட்டி (விளம்பி) மதியால் பெயர் பெற்ற மாதங்களின் பெயரைத் தூய தமிழால் வழங்குதல். அமாவாசை – பௌர்ணமி, ஏகாதசி, சுக்லபட்சம்-கிருஷ்ணபட்சம் எல்லாம் நமக்கு
28ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா
Click Here To Download PDF 28ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா இடம்: V M ஹால் 8/E,2 வது தெரு. V V காலனி, ஆதம்பாக்கம் சென்னை 600 088 நாள்: 01-01-2019 செவ்வாய்க்கிழமை நேரம்: காலை 8 முதல் இரவு 9.00 மணி வரை 7–ஆம் தந்திர முற்றோதல்திருமுறை விண்ணப்பம்,தமிழ்நாட்காட்டி மற்றும் சைவ-வைணவ போற்றி நூற்றிரட்டு நூல் வெளியீடு,திருமந்திர வினா விடை அரங்கம்திருமுறை இசைஅரங்கம்விருதரங்கம் முற்றோதல் வழி நடத்தல் திருமந்திரத் தமிழ்மாமணி செந்தமிழ் வேள்விச்சதுரர்
கந்தன் கவினறுமை (கந்த சஷ்டி) வழிபாடு
முதுமுனைவர் மு.பெ.ச. ஐயா அவர்களின் ஆதம்பாக்கம் அருந்தமிழ் வழிபாட்டு மன்றம் இந்த ஆண்டு நடத்திய கூட்டு வழிபாட்டில் முருகன் புகழ் பாடும் திருப்புகழ் சொற்பொழிவுகள் சிறப்பாக நடைபெற்றன. வரவேற்புரையும் நன்றியுரையும் ஆற்றியவர்: S. நாகரத்தினம் அவர்கள். முதல் நாள் - திருப்பரங்குன்றத் திருப்புகழ் சொற்பொழிவு - நிகழ்த்தியவர்: திரு.ச.திருச்சுடர்நம்பி. 2ஆம் நாள் - திருச்சீரலைவாய் திருப்புகழ் சொற்பொழிவு - நிகழ்த்தியவர்: திரு.இரா.உமாபதி. 3ஆம் நாள் - திருஆவினன்குடி திருப்புகழ் சொற்பொழிவு - நிகழ்த்தியவர்: திரு. மா.கருப்புசாமி. 4ஆம்