33 ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா

ஆன்மநேய அன்பர்களே! ஆண்டுதோறும் நமது குருபிரான் ஞானதேசிகர் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் வழிநடத்த திருமந்திர முற்றோதலை நடத்தி வரும் எங்கள் அமைப்புகள் அதன் வரிசையில் 33ம் ஆண்டு முற்றோதல் விழாவை திருவருள் நலத்தால் நடாத்த இருக்கின்றன. இவ்வாண்டு திருமந்திர முற்றோதல் ஐந்தாம் சுற்றாகவும் அதிலும் மூன்றாம் (3) தந்திரம் முற்றோதல் செய்யப்பட இருக்கிறது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம். நிகழ்ச்சி நிரல்: அழைப்பிதழ் இணைத்துள்ளேன். Download PDF விழாவின் முக்கிய நிகழ்வுகள்: 1. 3–ஆம் தந்திர முற்றோதல் 2. திருமந்திரம்

திருமந்திரத்தில் இல்லாதது எதுவும் இல்லை என்கிறார் வள்ளலார்

சென்ற நவராத்திரி இதழில் வந்த நமது குருபிரான் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் அளித்த பேட்டியின் தொடர்ச்சி குமுதம் பக்தி ஸ்பெஷல் தீபாவளி சிறப்பிதழில் வந்துள்ளது. நம் அன்பர்கள் அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டுகிறோம்.  

15ம் ஆண்டு கந்தன் கவினாறு (கந்த சஷ்டி) விழா

முருக நேய அன்பர்களே! வணக்கம்!! ஆதம்பாக்கம் அருந்தமிழ் வழிபாட்டு மன்றம் இறை திருவருளாலும் குருவருளாலும் நமது ஞானதேசிகர் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் வழிகாட்டுத்தலின்படி நடாத்தும் 15ம் ஆண்டு கந்தன் கவினாறு (கந்த சஷ்டி) விழா அழைப்பிதழை இணைத்துள்ளேன். முருகன் திருவருளை நிணைந்து இணைந்து அருள் நலம் பெற பணிவோடு அழைகின்றோம்!! முருகா ஆதம்பாக்கம் அருந்தமிழ் வழிபாட்டு மன்றம்  15ம்  ஆண்டு கந்தன் கவினாறு (கந்தசஷ்டி) விழா முருகு தமிழ் மெய்யன்பர்களே!! வணக்கம். மேற்படி இவ்வமைப்பு நடத்தும் தனது 15ஆம் ஆண்டு

தமிழ் வழிபாட்டுத் (தபால்) தலைமகனுக்குப் பாராட்டு விழா

   அன்பர்களே வணக்கம்! நமது குருபிரான் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்களது மலேசிய “தபால் தலை” அந்நாட்டில் வெளியிடப்பட்ட முக்கிய வரலாற்று நிகழ்வு என்பது தமிழர்களாகிய நமக்கெல்லாம் மிகப்பெரிய மகிழ்ச்சி. அதனைக் கொண்டாடும் விதமாக ஒரு பாராட்டு விழா நடத்த தெய்வத்தமிழ் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. அந்நிகழ்வின் அழைப்பிதழினை இத்துடன் இணைத்துள்ளோம். இக்கொண்டாட்டம் என்பது அவரோடு தமிழ் வழிப்பாட்டில் பயணித்தவர்கள், ஆதரவாளர்கள், பயின்ற மாணவர்கள் அனைவருக்கும் பெருமை எனவே அனைவரும் திரளாக வந்திருந்து இந்நிகழ்வை

செந்தமிழ் வழிபாட்டுப் பணியைப் பாராட்டி தபால் தலை

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை உயர்நிலை ஆலோசனைக் குழு உறுப்பினர் மற்றும் வள்ளலார் 200 விழாக் குழுவின் உறுப்பினரும், எங்கள் தெய்வத்தமிழ் அறக்கட்டளையின் நிறுவுனரும் இயக்குநருமான செந்தமிழ் வேள்விச் சதுரர், முதுமுனைவர். மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்களின் 40 ஆண்டு கால செந்தமிழ் வழிபாட்டுப் பணியைப் பாராட்டி போற்றும் விதமாக, மலேசிய அன்பர்கள் அண்மையில் 16-09-2023 அன்று பத்துமலை முருகன் கோயில் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது தமிழ்ச்சமய மாநாட்டில், அவரது “தபால் தலை” ஒன்றை வெளியிட்டுள்ளனர் என்ற செய்தியை மகிழ்வோடு

தமிழ்ச்சமய மாநாடு 2023

  பத்துமலையில் நான்காவது தமிழ்ச் சமய மாநாடு ; தமிழர்கள் பண்பாட்டு உடையில் திரண்டு வாருங்கள் https://nambikkai.com.my/detail/18012 பத்துமலை : பத்துமலையில் நடைபெறவிருக்கும் நான்காவது தமிழ்ச் சமய மாநாட்டுக்குத் தமிழர்கள் பாரம்பரிய உடையில் திரண்டு வருமாறு மாநாட்டு ஒருங்கினைப்பாளர் தலைவர் வீ. பாலமுருகன் கூறினார். மலேசியத் தமிழ்ச் சமயப் பேரவையின் ஏற்பாட்டிலான இம்மாநாடு வரும் செப்டம்பர் 16-ஆம் தேதி சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை பத்துமலை திருமுருகன் திருக்கோவில் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. தமிழால்,

தமிழ் அர்ச்சகர் பயிற்சி வகுப்பு – மாணவர் சேர்க்கை அறிவிப்பு – Tamizh Archakar Training

விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன விண்ணப்பப் படிவம் – இங்கே பதிவிறக்கம் செய்க. Click here to Download Application Form   தமிழ் அர்ச்சகர் பயிற்சி வகுப்பு - 12ஆம் குழாம் மாணவர் சேர்க்கை வணக்கம்! பாடல் பெற்ற தமிழகக் கோயில்கள் அனைத்தும் தமிழிலேயே பாடல் பெற்றவை. ஒன்று கூட வடமொழியில் பாடல் பெறவில்லை. ஆனால் கோயிலுக்குள்ளே வேற்று மொழி வழிபாடு! இந்த நிலை மாற தமிழ் வழிபாட்டுப் பயிற்சி பெற வேண்டுமா? நமது கோயில்களில் நற்றமிழ் வழிபாடு

Top