You are here
Home > செய்திகள் > எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் அருட்சுனைஞர் (அர்ச்சகர்) பட்டயப் படிப்பு

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் அருட்சுனைஞர் (அர்ச்சகர்) பட்டயப் படிப்பு

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் அருட்சுனைஞர் (அர்ச்சகர்)

ஓராண்டுப் பட்டயப் படிப்பு

சென்னையை அடுத்துள்ள காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயத்தில் சமயக் கல்விப்பிரிவின் கீழ் துவக்கப்பட்ட தமிழ் அருட்சுனைஞர் பட்டயப் படிப்பின் மூன்றாண்டுகள் நிறைவுற்றன. 2011 ஆம் ஆண்டில் 78 மாணவர்களும் 2012 ஆண்டில்115 மாணவர்களும் 2013 ஆண்டில் 60 மாணவர்களும்  சேர்ந்து தீக்கையும் பயிற்சியும் பெற்றார்கள். இந்தக் கல்வி ஆண்டிற்கான(2014) வகுப்புகள் மே 24 – ஆம் நாளிலிருந்து தொடங்குகின்றன. இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் தகவல்களை www.srmuniv.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்படிவம் – பதிவிறக்கம் செய்க

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மே 20 ஆம் தேதிக்குள் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்திற்கு வந்து சேர வேண்டும்.

ஒரு ஆண்டிற்கான கல்விக் கட்டணம் 1500 ரூபாய். வகுப்புகள் மாதம் இருமுறை சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வடபழனி வளாகத்தில் நடைபெறும்.

இவ்வாறு எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் மு. பொன்னவைக்கோ அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்படிவம் – பதிவிறக்கம் செய்க

 

download
srm

 

Top