You are here
Home > செய்திகள் > புறநானூறு தொடர் சொற்பொழிவு 200வது பாடல்

புறநானூறு தொடர் சொற்பொழிவு 200வது பாடல்

வணக்கம்.

நமது ஞானதேசிகர், முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் உரையாற்றும் புறநானூறு தொடர் சொற்பொழிவு ஏறத்தாழ 11 வருடங்கள் 4 மாதங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருவது இதுவரை யாரும் செய்திடாத அரும்பெரும் சாதனை என்று தமிழ் கூறும் நல்லுலகத்தார் போற்றுவர் என்பது மறுக்கொணா உண்மை.

அந்த அற்புத ஞானவேள்வியிலே தற்போது ஒரு முக்கிய பகுதியை வந்தடைந்துள்ளோம். 11 வருடங்கள் கழித்து 200வது பாடலை எட்டியுள்ளோம். இது ஒரு சிறந்த நிகழ்வு ஆகையால் இச்சிறப்பிற்கு சிறப்பு சேர்க்க முனைவர் திரு.அப்துல் காதர், பொதுச் செயலாளர், தமிழ் இயக்கம், VIT பல்கலைக் கழகம் மற்றும் முனைவர் திரு.கரு.நாகராஜன், தலைவர், தமிழ்ப் பேராயம், SRM பல்கலைக் கழகம் எனும் இருபெரும் தமிழ் ஆளுமை கொண்ட அறிஞர்கள் இந்நிகழ்வில் சிறப்புரை வழங்கி வாழ்த்த இருக்கிறார்கள்.

இந்நிகழ்வை நேரில் நடத்த காலச்சூழல் அமையவில்லை என்பதால் இணையம் வழியாக நேரலையில் இணைவோம்.

நாள்: 2021 ஏப்ரல் 17 ஆம் தேதி காரி(சனி)க் கிழமை அன்று இந்திய நேரப்படி மாலை 5.30 மணி அளவில் நடைபெற இருக்கிறது. 

தாங்கள் எல்லோரும் தெய்வமுரசு YouTube channel நேரலையில் குறித்த நேரத்தில் இணைந்தால் அந்நிகழ்வினைக் கண்டும் கேட்டும் மகிழலாம். அல்லது Zoom செயலி மூலம் நிகழ்வுக்கு இடையூறில்லாமல் இணைந்து கொள்ளலாம்

Zoom சந்திப்பு எண்: 873 4370 9878 கடவுக்குறியீடு : 254562

Top