You are here
Home > ஆசிரியர் மேசை > 6-ஆம் ஆண்டு மாணவர் குழாம் (Batch) சேர்க்கை அறிவிப்பு

6-ஆம் ஆண்டு மாணவர் குழாம் (Batch) சேர்க்கை அறிவிப்பு


சிவ சிவ

டாக்டர் பட்டம் பெற்ற
செந்தமிழ் வேள்விச் சதுரர்
மு.பெ.சத்தியவேல் முருகனாரின்
தெய்வத்தமிழ் அறக்கட்டளையும்
SRM பல்கலைக்கழகத் தமிழ் பேராயமும்
இணைந்து நடத்தும்
தமிழ் அருட்சுனைஞர் ஓராண்டுப் பட்டயப் படிப்பு
(DIPLOMA IN TAMIL ARUTSUNAIGNAR)

6-ஆம் ஆண்டு மாணவர் குழாம் (Batch) சேர்க்கை அறிவிப்பு

  • பிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமணை புகுவிழா உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகள், கோயில் குடமுழுக்கு மற்றும் நாட்பூசனைகள் ஆகியவை அடங்கிய 8 தனிப்பாடங்கள் தமிழாகமத்தின் வழி இரு பருவங்களாக (Semester) பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொன்றிலும் தேர்வு நடத்தி இறுதியில் SRM பல்கலைக்கழகத்தால் பட்டயம் வழங்கப்படும்

  • தகுதி: 8-ஆம் வகுப்பில் தேர்ச்சி மற்றும் தமிழில் ஆர்வம்; வயது வரம்பில்லை

  • 6-ஆம் ஆண்டு பட்டய வகுப்பு 18-06-2016 முதல் தொடக்கம்

  • விண்ணப்பப் படிவங்களைப் பின்வரும் முகவரியில் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் அல்லது விண்ணப்பப் படிவம் – பதிவிறக்கம் செய்க.
    தெய்வத்தமிழ் அறக்கட்டளை,
    9/1, மாஞ்சோலை தெரு, கலைமகள் நகர்,
    ஈக்காட்டுத் தாங்கல், சென்னை – 600032.
    தொலைபேசி: 9444079926 / 9500045865 (மா.கருப்புசாமி) / 9445103775 (பா.கந்தசாமி)
    மின்னம்பலம் தொடர்பு:www.dheivamurasu.org / www.srmuniv.ac.in / [email protected]

  • விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 15-06-2016

  • பயிற்சிக்கு உரிய நூல்கள் தேர்வுக் கட்டணம் உட்பட இருபருவங்களுக்கும் சேர்த்து மொத்தக் கட்டணம் ரூ.3000/- (ரூபாய் மூவாயிரம் தான்)

  • கட்டணத்தை விண்ணப்பப் படிவத்துடன் தெய்வத்தமிழ் அறக்கட்டளை பேரில் கேட்புக் காசோலையாக (DD) இணைக்கவும்.

  • ஏற்கெனவே  பலநூறு மாணவர்கள் பட்டயம் பெற்று செந்தமிழ் ஆகம அந்தணர்களாக இல்லச் சடங்குகளிலும், கோயில் பூசைகளிலும் களம் கண்டு வருகிறார்கள். கோயில்களில் தமிழே கொலுவிருக்க, வாழ்வியல் சடங்குகளில் வண்டமிழே வழிகாட்ட அரிதில் அமைந்துள்ள அருந்தமிழ் வாய்ப்பு! இப்பயிற்சியைப் பயன்கொள்ள விரையுங்கள்!

தெய்வத்தமிழ் அறக்கட்டளை

dheivamurasu_2016

Top