You are here
Home > செய்திகள் > தமிழில் கணணித் துறை முன்னோடி – SBS வானொலி ஆஸ்திரேலியா

தமிழில் கணணித் துறை முன்னோடி – SBS வானொலி ஆஸ்திரேலியா

தமிழில் கணினித் தொழில்நுட்பத்தைப் பிரபலப்படுத்தி வந்த திரு B. சீனிநிவாஸ் (50), மற்றும் அவரது துணைவியார் சங்கரகாந்தி (43) இருவரும் அண்மையில் அவர்களது சென்னை, ஈக்காடு தாங்கல், மாஞ்சோலை வீதியில் உள்ள வீட்டருகில் செம்பரம்பாக்கம் நீரணை திறந்து விடப்பட்டபோது வெள்ளத்தில் மூழ்கி மரணமானார்கள் என்ற துக்ககரமான செய்தியை எமது நேயர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

அவர் தனது PPP Infotech நிறுவனம் குறித்தும், தமிழில் அர்ச்சகர்களை உருவாக்கும் திட்டம் குறித்தும் கடந்த வருடம் நமது SBS வானொலிக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார். அவரது மறைவையிட்டு அந்த நேர்காணலை மீண்டும் இங்கு பதிவு செய்துள்ளோம். திரு B. சீனிநிவாஸ் அவர்களை நேர்கண்டவர் குலசேகரம் சஞ்சயன்.

சீனிநிவாஸ் தம்பதிகளை இழந்து வாழும் அவரது குடும்பத்தினருக்கு, SBS தமிழ் ஒலிபரப்புக்குழுவின் ஆழ்ந்த அனுதாபங்கள்.

 

Top