You are here
Home > 2017 (Page 6)

உலகத் தாய்மொழி விழா – தமிழர்களின் நிலை

செந்தமிழ் வேள்விச் சதுரர் மு பெ சத்தியவேல் முருகனார் அவர்கள் "உலகத் தாய்மொழி விழா நாளில் "தமிழர்களின் நிலை" என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றுகிறார்  

மாசிவனிரவு – சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை

சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை  இதோ வந்துவிட்டது! சிவராத்திரி என்கிற சிவனிரவு. இது மாதச் சிவனிரவல்ல. ஆண்டுச் சிவனிரவு; மாசிவனிரவு. இதன் சிறப்பும் உண்மைப் பெருளும் ஏற்கெனவே தெய்வமுரசு இதழில் பலமுறை வெளிவந்து விட்டது என்பதை வாசகர்கள் அறிவர். எனவே, அவற்றை மனத்தில் இருத்தி சிவனிரவில் செய்ய வேண்டிய ஒன்றை இங்கே சிந்திப்போம்! மாசிவனிரவு பெரும் பேரொடுக்கத்தை, லயத்தைக் குறித்தது. அங்கே செய்ய வேண்டியது சிவநாம செபம் அன்றி வேறு ஒன்றும் கிடையாது.

தமிழ் அருட்சுனைஞர் – மாணவர்களுக்கான பட்டயம் வழங்கும் விழா

தமிழ் அருட்சுனைஞர் பட்டயப்படிப்பு – 5 ஆம் குழாம் மாணவர்களுக்கான பட்டயம் வழங்கும் விழா 28 ஜனவரி 2017 சனிக்கிழமை அன்று வடபழனி SRM பல்கலைக்கழக கலையரங்கத்தில் நடைபெற்றது.

தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு

தெய்வமுரசு - பிப்ரவரி 2008 இன்று 29-1-2008 சட்ட மன்றத்தில் தை முதல் நாளை இனி தமிழ்ப் புத்தாண்டு தினமாகக் கொள்வதென சட்ட முன்னாக்கம் மன்றத்தின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது. ஆ! இதைவிட மகிழ்ச்சியான செய்தி வேறென்ன இருக்க முடியும்? இது தமிழறிஞர்களின் எத்தனை நாள் கனவு? இது தமிழ் மூதாதையர்களின் எத்தனை நாள் தினவு! காலையில் எழுந்து எந்த வானொலியைத் திருப்பினாலும் சில தொலைக்காட்சிகளைத் திருப்பினாலும் கட்டைக் குரலில் சக ஆண்டு என்று ஆண்டுப்

Top