You are here
Home > செய்திகள் > தமிழ் அர்ச்சகர் ஓராண்டு பட்டயப் படிப்பு – செய்தி அறிக்கை

தமிழ் அர்ச்சகர் ஓராண்டு பட்டயப் படிப்பு – செய்தி அறிக்கை

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக தமிழ்ப்பேராயம், தெய்வத்தமிழ் அறக்கட்டளையுடன் இணைந்து நடத்தும் தமிழ் அர்ச்சகர் ஓராண்டு பட்டயப் படிப்பின் ஐந்தாம் குழாம் முன்பதிவு நடந்து கொண்டிருக்கிறது.

பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள வாழ்வியல் சடங்குகளையும் கோவில் கடவுள் மங்கலம் மற்றும் நாட்பூசைகளையும் சிவதீக்கை பெற்று தமிழில் செய்வதற்கு உரிய இந்தப் பயிற்சி வடபழனி எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகிறது.

வகுப்புகள் ஒவ்வொரு மாதமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் என 4 நாட்கள் நடைபெறும். கட்டணம் ரூ.2500 (ரூபாய் இரண்டாயிரத்து ஐந்நூறு மட்டும்) பயிற்சி, நூல்கள் மற்றும் தேர்வு கட்டணம் உட்பட.

8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற யார் வேண்டுமானாலும் விண்ணப்பித்து இவ்வகுப்பில் பயின்று செந்தமிழாகம அந்தணர்களாக உயரும் படி அன்புடன் அழைக்கின்றோம்.

விண்ணப்பப் படிவத்தை  பதிவிறக்கம் செய்ய.

http://www.dheivathamizh.org/Application_Fresh2015.pdf

Top