You are here
Home > Author: Editor

பழனி மலைக்கோயில் ஆகம விதிப்படி கட்டப்பட்டதா ?

  சொல்வேந்தர் சுகி.சிவம் அவர்களுக்கு 1) பழனி மலைக்கோயில் ஆகம விதிப்படி கட்டப்பட்டதா? ஆம் என்றால் என்ன ஆகமம் 2) பழைய வரலாறுகள் பழனி குறித்து எங்கு கிடைக்கும்? 3) History Professors உதவி செய்யவார்களா?              தாங்கள் அடியேனிடம் கருத்து பெறக்கேட்டவை மேலன. இவற்றை வாட்ஸ் ஆப்பில் வரப்பெற்றேன்.             கேள்விகளின் உள்ளுறைகளை அவற்றின் இயைபு வரன்முறைப்படி இறுதியதில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்.  

திருப்பதி அருள்மிகு பாலாஜி தொன்மமும் புதிர்களும்

  பெறுநர் மாண்பமை திரு. V.V.சுவாமிநாதன் அவர்கள், மேனாள் அறநிலையத்துறை அமைச்சர், 3, 2வது தெரு, ராமகிருஷ்னாபுரம், ஆதம்பாக்கம், சென்னை -600088 பெருமதிப்பிற்குரிய பெரியீர்! வணக்கம். தங்களின் 21-2-2024 ஆம் நாளிட்ட கடிதமும் உடன் “திருப்பதி அருள்மிகு பாலாஜி தொன்மமும் புதிர்களும்” என்ற நூலும் கிடைத்து அதன் தொடர்பான தங்கள் அன்பு வேண்டுகோளையும் அறிந்தேன். சொல்லப்பட்ட நூலினை முழுமையாகப் படித்தேன். அதன் பின்னணியில் தாங்கள் வேண்டியபடி  எனது கருத்தை தங்களுடன் அடியிற்கண்டவாறு பகிர்ந்து கொள்கிறேன். அடியேன் முதலில் நூல் முழுமைக்கும் ஆய்வுக்கருத்துக்களை

13ம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் மற்றும் படிவிழா

https://www.youtube.com/watch?v=2dyNC5S8RCo&feature=youtu.be சீலம் நிறைந்த செம்மல்களே! வள்ளிமணாளன் திருவருளாலும், வாரியார் சுவாமிகள் குருவருளாலும், திருப்புகழ் சிவம் வேலூர்.மு.பெருமாள் அவர்கள் நல்ஆசியாலும் தெய்வத்தமிழ் அறக்கட்டளை நடத்தும் "தமிழர் திருநாள் ஆசிபெறும் 13ம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் மற்றும் படிவிழா வருகின்ற 06-01-2024 காரி(சனி)க் கிழமை மற்றும் 07-01-2024 ஞாயிற்றுக் கிழமை அன்று நமது ஞானதேசிகர் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் வழிநடத்த கீழ்கண்ட நிகழ்ச்சி நிரலின்படி நடைபெற உள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாண்டு பொங்கல் தொடங்கி அன்பர்கள்

தமிழ் நாட்காட்டி 2024

      தெய்வமுரசு நற்றமிழ் நாட்காட்டியின் சிறப்புகள் எண்ணிலும் எழுத்திலும் எல்லாக் கோணத்திலும் தூய தமிழ்ப்பெயர்கள் அமைந்த நாட்காட்டி. தமிழில் எண்களின் வரிவடிவம் உண்டா என்று அறியாத தமிழிளந் தலைமுறைக்கு அவற்றை அறிமுகப்படுத்தல். 60 தமிழ் ஆண்டுகளின் பெயர்களையும் வடமொழி பெயர்களுக்கு பதிலாக பொருள் பொதிந்த  தமிழ் இணைப் பெயர்கள் – வெம்முகம் (துன்முகி), பொற்றடை (ஏவிளம்பி), அட்டி (விளம்பி) மதியால் பெயர் பெற்ற மாதங்களின் பெயரைத் தூய தமிழால் வழங்குதல். அமாவாசை –

33 ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா

ஆன்மநேய அன்பர்களே! ஆண்டுதோறும் நமது குருபிரான் ஞானதேசிகர் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் வழிநடத்த திருமந்திர முற்றோதலை நடத்தி வரும் எங்கள் அமைப்புகள் அதன் வரிசையில் 33ம் ஆண்டு முற்றோதல் விழாவை திருவருள் நலத்தால் நடாத்த இருக்கின்றன. இவ்வாண்டு திருமந்திர முற்றோதல் ஐந்தாம் சுற்றாகவும் அதிலும் மூன்றாம் (3) தந்திரம் முற்றோதல் செய்யப்பட இருக்கிறது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம். நிகழ்ச்சி நிரல்: அழைப்பிதழ் இணைத்துள்ளேன். Download PDF விழாவின் முக்கிய நிகழ்வுகள்: 1. 3–ஆம் தந்திர முற்றோதல் 2. திருமந்திரம்

திருமந்திரத்தில் இல்லாதது எதுவும் இல்லை என்கிறார் வள்ளலார்

சென்ற நவராத்திரி இதழில் வந்த நமது குருபிரான் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் அளித்த பேட்டியின் தொடர்ச்சி குமுதம் பக்தி ஸ்பெஷல் தீபாவளி சிறப்பிதழில் வந்துள்ளது. நம் அன்பர்கள் அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டுகிறோம்.  

15ம் ஆண்டு கந்தன் கவினாறு (கந்த சஷ்டி) விழா

முருக நேய அன்பர்களே! வணக்கம்!! ஆதம்பாக்கம் அருந்தமிழ் வழிபாட்டு மன்றம் இறை திருவருளாலும் குருவருளாலும் நமது ஞானதேசிகர் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் வழிகாட்டுத்தலின்படி நடாத்தும் 15ம் ஆண்டு கந்தன் கவினாறு (கந்த சஷ்டி) விழா அழைப்பிதழை இணைத்துள்ளேன். முருகன் திருவருளை நிணைந்து இணைந்து அருள் நலம் பெற பணிவோடு அழைகின்றோம்!! முருகா ஆதம்பாக்கம் அருந்தமிழ் வழிபாட்டு மன்றம்  15ம்  ஆண்டு கந்தன் கவினாறு (கந்தசஷ்டி) விழா முருகு தமிழ் மெய்யன்பர்களே!! வணக்கம். மேற்படி இவ்வமைப்பு நடத்தும் தனது 15ஆம் ஆண்டு

தமிழ் வழிபாட்டுத் (தபால்) தலைமகனுக்குப் பாராட்டு விழா

   அன்பர்களே வணக்கம்! நமது குருபிரான் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்களது மலேசிய “தபால் தலை” அந்நாட்டில் வெளியிடப்பட்ட முக்கிய வரலாற்று நிகழ்வு என்பது தமிழர்களாகிய நமக்கெல்லாம் மிகப்பெரிய மகிழ்ச்சி. அதனைக் கொண்டாடும் விதமாக ஒரு பாராட்டு விழா நடத்த தெய்வத்தமிழ் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. அந்நிகழ்வின் அழைப்பிதழினை இத்துடன் இணைத்துள்ளோம். இக்கொண்டாட்டம் என்பது அவரோடு தமிழ் வழிப்பாட்டில் பயணித்தவர்கள், ஆதரவாளர்கள், பயின்ற மாணவர்கள் அனைவருக்கும் பெருமை எனவே அனைவரும் திரளாக வந்திருந்து இந்நிகழ்வை

செந்தமிழ் வழிபாட்டுப் பணியைப் பாராட்டி தபால் தலை

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை உயர்நிலை ஆலோசனைக் குழு உறுப்பினர் மற்றும் வள்ளலார் 200 விழாக் குழுவின் உறுப்பினரும், எங்கள் தெய்வத்தமிழ் அறக்கட்டளையின் நிறுவுனரும் இயக்குநருமான செந்தமிழ் வேள்விச் சதுரர், முதுமுனைவர். மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்களின் 40 ஆண்டு கால செந்தமிழ் வழிபாட்டுப் பணியைப் பாராட்டி போற்றும் விதமாக, மலேசிய அன்பர்கள் அண்மையில் 16-09-2023 அன்று பத்துமலை முருகன் கோயில் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது தமிழ்ச்சமய மாநாட்டில், அவரது “தபால் தலை” ஒன்றை வெளியிட்டுள்ளனர் என்ற செய்தியை மகிழ்வோடு

Top