எற்றுக்கு விரைந்தீர்??!!! நல்லதொரு மாலை நேரத்தில், வானம் திருப்பரங்குன்றம் முருகப்பெருமானை கண்குளிரக் கண்டு வணங்க வரும் முருகனடியார்களை பன்னீர் தெளித்து வரவேற்பது போல நீர் தெளித்து மண்ணையும் மனதையும் குளிர வைத்துக் கொண்டிருந்தது. தமிழின் மணமும் அதன் குணமும் கொண்டு என்றும் இளமையாய் இருக்கும் அந்த மலை கிழவோனாகிய முருகப்பெருமானை நாளும் வணங்கி தமிழால் வழிபட்டு, எல்லோரையும் வழிபட நெறிவகுத்து, நனிசொட்ட சொட்ட பாடியும் பேசியும் பரவிவரும் குருபிரான் ஒருவர் தன்