உ முருகா தமிழிசைச் சங்கத்தின் பண்ணாராய்ச்சி கலந்தாய்வுக் கூட்டம் - செந்தமிழ்வேள்விச்சதுரர் தமிழிசை இயக்கத்தின் முன்னோடியான ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் அவர்கள் உருவாக்கியது தமிழிசைச் சங்கம். இச்சங்கம் உருவாகிய நாள் 19-04-1943. இதற்கென உருவாக்கப்பட்ட மன்றம் தான் சென்னையில் உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உருவாகிய புகழ் பெற்ற அண்ணாமலை மன்றம். இம்மன்றம் திறந்து வைக்கப்பட்ட நாள்:21-10-1952. சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னால் இம்மன்றம் பல்லாண்டுகளாக தமிழிசைக்காக அமைதியாக நீதி கேட்டுக் கொண்டு நிற்கிறது! இத்தமிழிசைச் சங்கத்தின்
Month: September 2013
புதிய தி இந்து தமிழ் நாளிதழ்க்கு பேருவகையுடன் தெய்வமுரசு வாழ்த்துக்கள்!
புதிய தி இந்து தமிழ் நாளிதழ்க்கு பேருவகையுடன் தெய்வமுரசு வாழ்த்துக்கள்! 16-9-2013-ஆம் நாள் காலை இனிதாக விடிந்தது! காலையில் கையில் தி இந்து என்ற புதிய தமிழ் நாளிதழ்! 135- ஆண்டுகட்குப் பின்னர் இந்து குழுமத்திற்கு தமிழ் நாளிதழினை நற்றமிழில அ நாடுலாவச் செய்திட வேண்டும் என்ற எண்ணம் தோன்றி முன்னம் வந்திருப்பது தமிழ் அன்னையின் திருவருளே! தெய்வமுரசு என்கிற விண்பதிப்பின் ஆசிரியர் என்ற முறையில் இந்நாளேடு புதியதாய் தொடங்கப்பட்டாலும் தமிழ் மக்கள்
An open letter to Esquire Thiru. Tarun Vijay M.P.
To Thiru. Tarun Vijay Member of Parliament(Rajya Sabha) New Delhi - 110 001 An open letter to Esquire Thiru. Tarun Vijay M.P. Rare appears such a news-piece in newspapers as the report of speech made by you in Rajya Sabha. It was so nectarine to go through for people of India, especially people of Tamil
சேய்த்தொண்டர் புராணம்
சேய்த்தொண்டர் புராணம் பகுதி-24 செந்தமிழ்மாருதன் ஏப்ரல் 2013 இதழ் தொடர்ச்சி. . . மேல் இதழில் கச்சியப்பரின் தந்தையார் காளத்தியப்பர் காஞ்சி குமரகோட்டப் பூசையைக் கச்சியப்பரிடம் ஒப்படைத்து விட்டு விடுதலை பெற்றார் என்பதைக் கண்டோம். அந்த அற்புதமான கந்தன் பூசையைச் சிந்தை மகிழ கச்சியப்பர் நாடோறும் நடாத்த மேற்கொள்கிறார். காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி போது ஆறிலும் புவனம் புகழ பூசைகள் நடந்து வருகின்றன. ஒரு நாள் இரவு; கச்சியப்பர் கரணமெலாம் குழைய கனவில் முருகன் காட்சி தந்தான்.
பதிப்பாசிரியர் வீட்டில் பதினோராந் திருமுறை முற்றோதல்
பதிப்பாசிரியர் வீட்டில் பதினோராந் திருமுறை முற்றோதல் - பவனிப்புலவன் “உமாபதி ஐயா! எங்கே கிளம்பிட்டீங்க!” நான் திரும்பிப் பார்த்த போது நன்கு பழக்கமான ஒரு திருமுறை அன்பர் நின்றிருந்தார். போகும் போதே எங்க கிளம்பிட்டீங்க என்று ஒரு கேள்வியா? உருப்பட்டா மாதிரி தான் என்று நினைத்துக் கொண்டேன். வீட்டிற்குள் திரும்பி ஒரு டம்ளரில் தண்ணீர் குடித்து விட்டு வரலாமா என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே அந்த அன்பர் கேட்டார்: ‘ஐயா! ஒரு சோடா குடிக்கலாமா?
ஆசிரியர் மேசையிலிருந்து
ஆசிரியர் மேசையிலிருந்து . . . “தெரிகிறது விண்ணில் தெய்வமுரசு” முந்துதமிழ் முருகன் அருளால் இப்போது தெய்வமுரசு இதழ் விண்ணில் ஏறிவிட்டது; மின்னத் தொடங்கிவிட்டது. ஏப்ரல் 2013 வரை தெய்வமுரசு மண்ணில் நல்ல வண்ணம் தெய்வத்தமிழைப் பரப்பிய நற்பணியை இனி விண்ணிலிருந்து வியக்கும் வண்ணம் ஆற்ற உள்ளது. சரியாக 9 ஆண்டுகள் 108 இதழ்களால் தெய்வத்தமிழுக்குத் தெய்வமுரசு மண்ணில் அருச்சனை செய்தது. இனி நமது நோக்கமாகிய தமிழருச்சனை விண்ணிலிருந்து நடைபெறும். ஏப்ரல் 2013-லிருந்து ஆகஸ்டு
சர்வ ஞான உத்தர ஆகமம் – தமிழில்
சர்வ ஞான உத்தர ஆகமம் – தமிழில் பகுதி – 13 - செந்தமிழ் வேள்விச் சதுரர் ஏப்ரல் 2013 இதழின் தொடர்ச்சி. . . இதுவரை 12 பகுதிகளில் முருகப்பெருமான் கேள்விகள் கேட்க சிவபெருமான் பதில் கூறி வருவதான சர்வ ஞான உத்தர ஆகமத்தின் ஒரு பகுதி வரை பார்த்து வந்தோம். சென்ற இதழில் பாவனை எத்தனை வகைப்படும், எந்த பாவனை பயன்படும் என்று விளக்கினார் சிவபெருமான். அதனை மேலும் விளக்கி துவித பாவனையை
சைவக் கேள்விச் சிற்றம்பலம்
சைவக் கேள்விச் சிற்றம்பலம் செந்தமிழ் வேள்விச்சதுரர் பகுதி – 12 ஏப்ரல் 2013 இதழ் தொடர்ச்சி . . . அறிவாகரர்: அன்பரே! யோகம் என்பதைப் பதஞ்சலி முனிவர் தான் முதலில் கண்டு பிடித்ததாகக் கூறியது எத்தனை பெரிய பொய் என்பதைச் சான்று காட்டி விளக்கினால் அம்பலத்தார் எல்லாம் ஆச்சரியப் படுவீர்கள். சிற்றம்பல அன்பர்: சொல்லுங்கள் ஐயா! நாங்களும் இன்னும் எங்களைப் போல இன்னும் உலகில் பலரும் எவ்வளவு அறியாமையில் இருந்து கொண்டிருக்கிறோம் என்பதைத் தங்களிடம் விவரங்களைக்
அறத்தமிழ் வேதம்
அறத்தமிழ் வேதம் – மூதுரை – இளம்பூரணன் – பகுதி – 12 செல்லச் சிறுவர்களே ! இது வரை மூதுரையில் 12 பாடல்களைப் பார்த்தோம். இப்போது 13-வது பாடலைப் பார்ப்போம். அது வருமாறு: கவையாகிக் கொம்பாகிக் காட்டடிகத்தே நிற்கும் அவையல்ல நல்ல மரங்கள் – சவைநடுவே நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய மாட்டா தவன்நல் மரம். எத்தனையோ பேர், கோடிக் கணக்கில் எழுதப் படிக்கத் தெரியாமலே வாழ்ந்து மறைந்து போகிறார்கள். இந்தியாவில் நல்ல வேளை, தமிழ்நாட்டையும், கேரளாவையும் இந்தப் பட்டியலில் சேர்க்க